India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயம், இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. மேலும் இவரது சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர் ஒருவர், 60 ஏக்கர் நிலங்களை இக்கோவிலுக்கு வழங்கினார். இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்க ஊர் பெருமைய ஷேர் பண்ணுங்க.
அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயம், இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. மேலும் இவரது சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர் ஒருவர், 60 ஏக்கர் நிலத்தை இக்கோவிலுக்கு வழங்கினார். இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்க ஊர் பெருமையை ஷேர் பண்ணுங்க.
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.20) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளை மனு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர்வு கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமம் அருகே உள்ள சேத்தியாதோப்பில் இருந்து தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி சில ஆண்டுகளாக Patel infra என்ற நிறுவனம் மூலம் செய்யப்படுகிறது. இதில் அரியலூர் மாவட்ட பகுதிகளில் மிகவும் தமதமாக பணி நடக்கும் நிலையில், கும்பகோணம் – தஞ்சாவூர் சலையில் பணி நிறைவு பெற்று இன்று (ஜன.19) முதல் அரியலூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுங்கவரி வசூல் செய்யப்பட உள்ளது.
அரியலூர் மாவட்ட காவல் துறை தலைவர் தீபக் சிவாச் அவர்கள் காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து புகார் அளிக்க போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலியை Drug Free TN-APP ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இதில் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் நகரில் திமுக சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில் கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் எம்.எல்.ஏ கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வருகை புரிந்தார். இந்நிலையில் பயணியர் மாளிகையில் தங்கி இருந்த அமைச்சர் கோவி. செழியனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் திமுக சட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா. சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 65-வது மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றன. அதன்படி, அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு விடுதி மாணவர்கள் அணியினர் ஹாக்கி போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில் இறுதிப்போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியை வீழ்த்தினர். இதையடுத்து அரியலூர் மாணவர்கள் அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக நாளை மறுநாள் (ஜன.21) காலை 11 மணியளவில் ‘மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ மேற்பார்வை பொறியாளர் தலைமையில், அரியலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அரியலூர் கோட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணூங்க.
அரியலூர் பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக அரியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பெரிய நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த தர்மதுரை என்பவரை போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் தேளூர் பகுதியில் குமார் என்பவரை கைது செய்து 690 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.