Ariyalur

News January 12, 2025

அரியலூரில் கரும்பு விற்பனை மும்முரம்

image

அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கரும்பு விற்பனை வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 1 கட்டு கரும்பு ரூ.450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த அளவில் மட்டுமே இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் கரும்பு விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News January 12, 2025

அரியலூர்: இந்திய விமானப்படையில் பணி வாய்ப்பு

image

இந்திய விமானப்படையில் வரும் 29-ஆம் தேதி மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கும், பிப்.4-ஆம் தேதி மருந்தாளுனர் பணியிடத்திற்கும் ஆள்தேர்வு நடக்கிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 7464850500 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது co.8asc-tn@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News January 11, 2025

செந்துறை: நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு

image

செந்துறை நியாய விலை கடையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொருட்களின் கையிருப்பு குறித்த விவரம், பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

News January 10, 2025

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் 

image

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசுதினம் (ஜன-26) ஆகிய தினங்களில் மட்டும் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 10, 2025

மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். எனவே, போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

அரியலூரில் சீமான் மீது திராவிடர் கழகத்தினர் புகார்

image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2 நாட்களாக தந்தை பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செந்துறை காவல் நிலையத்தில் பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் தலைமையில் புகார் மனு அளித்தனர்.

News January 9, 2025

அரியலூர் இரவு ரோந்து போலீசாரின் தொடர்பு நம்பர் வெளியீடு

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் செந்துறை திருமானூர் மீன்சுருட்டி தா.பழூர் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு போலீசாரின் கைபேசி எண் மாவட்ட காவல் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 9, 2025

அரியலூர்: பெயர் காரணம்

image

அரி+இல்+ஊர்= அரியிலூர். அரி- விஷ்ணு இல்- உறைவிடம் ஊர்- பகுதி. விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே அரியிலூர். விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டு கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது என்றும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News January 9, 2025

அரியலூரில் கடும் போக்குவரத்து நெருக்கடி

image

அரியலூர் நகர் பகுதியில் பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பகல் நேரங்களில் பல்வேறு இடங்களில் கனரக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி பொருட்களை இறக்குவதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

அரியலூர்: மாவட்ட அளவிலான கல்வி குழு கூட்டம்

image

அரியலூர் வட்டார மையத்தில் மாற்றுத்திறன் மாணவருடைய வளர்ச்சிக்காக வட்டார அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாணவர்களின் நலன் சார்ந்து விவாதிக்கப்பட்டது கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர்கள் தலைமை ஏற்று நடத்தினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முன்னிலை வகித்தார் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!