Ariyalur

News March 19, 2025

மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு தொழில் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் <>தாட்கோ<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு SHARE பண்ணுங்க..

News March 18, 2025

அரியலூர்: ரூ.25000 சம்பளம் அரசு வேலை!

image

அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MIS நடவடிக்கைகளை சிறந்த முறையில் செயல்படுத்திட வெளி ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளர் (MIS Analyst) பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள், மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மகமை அலுவலகத்தில் 28.03.2025-க்குள் தங்களது விண்ணப்பத்தினை நேடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News March 17, 2025

அபூர்வ அகஸ்தீஸ்வரர் கோயில்

image

அரியலுார், மேலப்பழுவூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயில், அபூர்வ சிற்பங்களையும் கல்வெட்டுக்களையும் வரலாற்றையும் தன்னகத்தே கொண்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயில். இங்கு, 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே, சிவனே சிவனை சுமப்பது போன்ற காட்சியும், அனகோண்டாவை நினைவு படுத்தும் விதத்தில் மிகப்பெரிய மிருகங்களை விழுங்கும் பாம்பும் என பல கலையம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த கோயில் பற்றி எல்லோரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்

image

தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்ப்பமுள்ளவர்கள் <>இதை கிளிக்<<>> செய்து மார்ச் 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 17, 2025

பாதுகாக்கப்படும் சோழர் காலத்திய சிற்பங்கள்

image

முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் விக்கிரமங்கலம் கிராமம் நிறுவப்பட்டு அவரது குடும்பப் பெயரால் விக்கிரமசோழபுரம் என அழைக்கப்பட்டது. சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. மேலும், இங்குள்ள சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. நம்ம ஊர் பெருமையை பிறருக்கும் SHARE பண்ணுங்க…

News March 17, 2025

“பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்”-மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் உரிய கள விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரடியாக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற இடைத்தரகர்களிடமோ, இ-சேவை மைய பணியாளர்களிடமோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க..

News March 16, 2025

ஆங்கில பயிற்சி: ஆதிதிராவிடர்- பழங்குடியினருக்கு அழைப்பு

image

தாட்கோ மூலம் பி.எஸ்சி, எம்.எஸ்சி நர்சிங்; போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர தாட்கோ <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News March 16, 2025

அரியலூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

News March 16, 2025

அரியலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு பாத சிகிச்சை பிரிவு தொடக்கம்

image

தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீரிழிவு பாத மருத்துவ திட்டம் மூலம், அரியலூர் அரசு மருத்துவமனையில் பாத சிறப்பு சிகிச்சை பிரிவு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நீரிழிவு நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறலாமென மருத்துவமனையின் டீன் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இத்தகவலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 15, 2025

வேளாண் பட்ஜெடில் வெளியான முக்கிய அறிவிப்பு

image

தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 15) வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் அரியலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முந்திரி சார்ந்த தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட மக்களே SHARE பண்ணுங்க…

error: Content is protected !!