India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேரவிருப்பம் உள்ள மாணவர்கள் <
அரியலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவ சேவை நிலையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், செவிலியர் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 24.3.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே <
தமிழ்நாடு ஆதித் திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, தாட்கோ வாயிலாக, புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 21 முதல், 25 வயதுக்கு உட்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், லிங்க் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே வாவஜாநகரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் எட்டாவது புத்தகத் திருவிழா இன்று தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை இங்கு https://www.arasubus.tn.gov.in/ செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
அரியலூர் மாவட்டத்தின் சார்பில் இன்று தொடங்கும் 8வது புத்தக திருவிழாவை இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைக்க உள்ளதாகவும் இதில் அரியலூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அமைச்சர் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5வது தளத்தில் உள்ள அரங்கத்தில், முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச் 21) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதனை உங்களுக்கு தெரிந்த முன்னாள் படைவீரர்களுக்கு ஷேர் பண்ணுங்க…
அரியலூர் அருகே குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி 2009 ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பதற்காக கீழக்குடியிருப்பை சேர்ந்த ரமேஷிடம் 4.5 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ் தன்னை பொன்னுசாமி ஏமாற்றியதாக மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் ரமேஷ் கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையில் ரமேஷ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் 21.03.2025 அன்று காலை 9.00 மணிக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 ஆவது தளத்தில் நடைபெற உள்ளது. மேலும் அம்முகாமில் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் மருத்துவ நிதியுதவி மற்றும் பிற நிதி உதவிகள் குறித்து விளக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
கடற்படையில் உள்ள குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் , லஸ்கார்- I, தீயணைப்பாளர், டோப்பஸ்பதவிக்கு உள்ளிட்ட பதவிகளில் உள்ள 327 காலியிடங்களும் நிரப்பபடவுள்ளது. மாத ஊதியம்: லஸ்கர்களின் சிராங் பதவிக்கு மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை கிடைக்கும். இதற்கு <
Sorry, no posts matched your criteria.