Ariyalur

News January 21, 2025

அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், 2025-26ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

News January 20, 2025

201 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு.

News January 20, 2025

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 மனுக்கள் பெறப்பட்டன

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 291 மனுக்கள் பெறப்பட்டன.

News January 20, 2025

அரியலூர்: மிகவும் பலமையான தேவாலயம்

image

அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயம், இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. மேலும் இவரது சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர் ஒருவர், 60 ஏக்கர் நிலங்களை இக்கோவிலுக்கு வழங்கினார். இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்க ஊர் பெருமைய ஷேர் பண்ணுங்க.

News January 20, 2025

அரியலூர்: வீரமாமுனிவரால் கட்டப்பட்ட மிகவும் பலமையான தேவாலயம்

image

அரியலூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயம், இத்தாலியிலிருந்து அரியலூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. மேலும் இவரது சேவையைக் கண்டு மகிழ்ந்த பாளையக்காரர் ஒருவர், 60 ஏக்கர் நிலத்தை இக்கோவிலுக்கு வழங்கினார். இக்கொடை பற்றிய குறிப்புகள் கி.பி 1763 இல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு, இந்த ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உங்க ஊர் பெருமையை ஷேர் பண்ணுங்க.

News January 20, 2025

அரியலூர்: மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.20) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளை மனு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர்வு கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2025

அரியலூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுங்கவரி

image

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமம் அருகே உள்ள சேத்தியாதோப்பில் இருந்து தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி சில ஆண்டுகளாக Patel infra என்ற நிறுவனம் மூலம் செய்யப்படுகிறது. இதில் அரியலூர் மாவட்ட பகுதிகளில் மிகவும் தமதமாக பணி நடக்கும் நிலையில், கும்பகோணம் – தஞ்சாவூர் சலையில் பணி நிறைவு பெற்று இன்று (ஜன.19) முதல் அரியலூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் சுங்கவரி வசூல் செய்யப்பட உள்ளது.

News January 19, 2025

அரியலூர் Drug Free ஆப்பை பயன்படுத்தி ரகசியம் காக்கப்படும்

image

அரியலூர் மாவட்ட காவல் துறை தலைவர் தீபக் சிவாச் அவர்கள் காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து புகார் அளிக்க போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலியை Drug Free TN-APP ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இதில் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2025

அரியலூர்- இறுதிப் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்

image

ஜெயங்கொண்டம் நகரில் திமுக சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில் கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் எம்.எல்.ஏ கண்ணன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

News January 19, 2025

அரியலூர்- அமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை

image

ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வருகை புரிந்தார். இந்நிலையில் பயணியர் மாளிகையில் தங்கி இருந்த அமைச்சர் கோவி. செழியனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன் திமுக சட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா. சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!