India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்துறை வட்டத்திற்குட்பட்ட செந்துறை ஞானாம்ப ஞானாம்பாள் திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அளிக்கும் மனுக்களை பெற உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கபட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட உள்ளது. எனவே செந்துறை பகுதி பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபட்டுள்ளது
உடையார்பாளையம் அருகே துளாங்குறிச்சி கிராமத்தில் சௌடாம்பிகா பள்ளி வாகனமும் சரக்குந்து வாகனமும் நேருக்கு நேர் மோதியதிக் கொண்டதில் சரக்கு வாகனத்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. சரக்குந்தில் பயணம் செய்தவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்களும் வரும் மாா்ச் 10ஆம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மாா்ச் 12ஆம் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் <
அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கீழ காலனி தெருவைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் எபிசாமுவேல்(12). இவர் நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள முந்திரி தோட்டத்தில் இருக்கும் மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது , சேலை கழுத்தில் இறுகி இறந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <
அரியலூர் மாவட்டத்தில் 1,11,547 விவசாயிகளுக்கு வேளாண் அடுக்கு திட்டத்தில் நில உடைமை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 43,503 விவசாயிகளுக்கு பதிவேற்ற பணி முடிந்துள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, வேளாண் வணிகம் ஆகிய துறைகளின் மூலம் பணி நடைபெற்று வருகிறது. ஆகவே, விவசாயிகள் வேளாண்மை அடுக்குத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள சாஸ்திரி நகரில் முதல்வர் மருந்தகத்தின் மொத்த கிடங்கு அமைந்துள்ளது. இக்கிடங்கினை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது இருப்பில் உள்ள மருந்துகளின் வகைகள், அவற்றின் மொத்த இருப்பு ஆகியவை குறித்து கேட்டிருந்த ஆட்சியர், தேவைக்கேற்ப உடனுக்குடன் மருந்துகளை மருந்தகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இதில் தொழில்முனைவோருக்கான ஒருநாள் “ChatGPT”பயிற்சி வகுப்பு நாளை (மார்ச்.08) திருச்சி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டார்ப் நிறுவனர்கள், தொழிமுனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 9894920819/ 9080609808 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
Sorry, no posts matched your criteria.