India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெயங்கொண்டம், கண்டியங்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீட்ளாயம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் மங்கள இசை, நாதஸ்வரம் இசைக்க மங்கள நடைபெற்றது. பின்னர் பரிவாரங்களுடன் புனித தீர்த்தக்கடம் புறப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கொன்ற தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்ற குழந்தையின் தாத்தா வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால் கடன் தொல்லை மற்றும் உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையில் கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.
ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா பாலமுருகன் தம்பதி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்களது குழந்தை தண்ணீரில் மூழ்கடிகத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சங்கீதாவின் தந்தை வீரமுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், பேரனை கொன்ற தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்திலுள்ள மேம்பாலத்தின் கீழ் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் மது விற்பனை செய்தவர் மது பாட்டிலை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் 31 மது பாட்டில்கள், ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் அடுத்த பொய்யூர் கிராமத்தில் மருதையாற்றில் இன்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கிராம அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கும்பகோணம் கோட்டத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கும்பகோணம் கோட்டத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா பாலமுருகன் தம்பதியினருக்கு பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசுவை கொலை செய்தது யார் எவ்வாறு சிசு இறந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
அரியலூர் – ஒட்டக்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலையில் அடிப்பட்டு சடலமாக கிடப்பதாக நேற்று விருத்தாச்சலம் ரயில்வே போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.