news

News April 3, 2025

‘ஹிட்’ படத்தில் ஹீரோவாகும் கார்த்தி…!

image

தெலுங்கில் ஹிட் 4-ஆம் பாகத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானி நடிப்பில் சைலேஷ் கொலானுவின் போலீஸ் த்ரில்லர் படமான ‘ஹிட் 3’, மே 1-ம் தேதி வெளியாக உள்ளது. இதில், நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடுத்த பாகத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு முன்னோட்டமாக இந்த கேமியோ இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 3, 2025

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

image

வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக முன்னணி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறக்க வருகை தரும் PM மோடியை EPS சந்தித்துப் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் PM மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

News April 3, 2025

அண்ணாமலைக்கு டெல்லியில் நடந்தது என்ன? (1/2)

image

டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களை அண்ணாமலை அண்மையில் சந்தித்தபோது என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி என்று அண்ணாமலையிடம் தலைவர்கள் கூறியதாகவும், இக்கூட்டணியை ஏற்றால் மாநில தலைவராக அவர் நீடிக்கலாம், கூட்டணிக்காக அண்ணாமலையை இழக்க விரும்பவில்லை, இனி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என தலைவர்கள் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

News April 3, 2025

அண்ணாமலைக்கு டெல்லியில் நடந்தது என்ன? (2/2)

image

பாஜக மேலிடத் தலைவர்களிடம் சில புள்ளி விவரங்களை அளித்து, அதிமுகவுடனான கூட்டணி பாஜகவுக்கு நல்லதில்லை, அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என அண்ணாமலை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதைக்கேட்ட மேலிடத் தலைவர்கள், நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும்படியும், அதிமுக கூட்டணியை ஏற்கவில்லையேல் கட்சிக்கு முக்கியம் அளித்து பதவி விலகும்படி சொன்னதாக கூறப்படுகிறது.

News April 3, 2025

35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

இடி, மின்னலுடன் மழை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ஈரோடு, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி. லேசான மழை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தி.மலை.

News April 3, 2025

பீம்ஸ்டெக் என்றால் என்ன?

image

வங்காள விரிகுடா அருகிலுள்ள நாடுகள் இடையே பொருளாதார தொடர்பை ஏற்படுத்த 1997இல் உருவாக்கப்பட்டது பீம்ஸ்டெக். இதில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், பூடான், நேபாளம் அங்கம் வகிக்கின்றன. மோடி பிரதமரான பிறகு பீம்ஸ்டெக்கிற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது. பீம்ஸ்டெக் நாடுகள் மக்கள் தொகை 167 கோடி. ஜிடிபி 2.88 டிரில்லியன் டாலர். 60 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெறுகிறது.

News April 3, 2025

FD டெபாசிட் வட்டியை குறைத்த HDFC, YES BANK வங்கிகள்

image

FD டெபாசிட் மீதான வட்டியை HDFC, YES BANK குறைத்துள்ளன. ரூ.3 கோடிக்கும் குறைவான தொகை, 2 ஆண்டுகள், 11 மாதங்கள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் வட்டியில் 30 புள்ளிகளையும், 4 Yrs, 7 Months டெபாசிட் திட்டங்களுக்கு 40 புள்ளிகளையும் HDFC குறைத்துள்ளது. இதேபோல், YES BANK வங்கியும் வட்டியில் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. சேமிப்புக்கு வட்டி குறைத்தாலும், அதிக அளவில் கடன்கள் வழங்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

News April 3, 2025

டாப் 5 பிளாஸ்டிக் மாசு நிறைந்த நாடுகள்!

image

பிளாஸ்டிக் மாசு நிறைந்த 5 நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி ஆண்டுக்கு 9.3 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வது தெரியவந்திருக்கிறது. அடுத்தபடியாக 3.5 மி.டன்னுடன் நைஜீரியா, 3.4 மி.டன்னுடன் இந்தோனேஷியா, 2.8 மி.டன்னுடன் சீனா, 2.6 மி.டன்னுடன் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

News April 3, 2025

பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா

image

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கராச்சியில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவர் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு சர்தாரிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 3, 2025

கோழி இறைச்சி சாப்பிட்ட 2 வயது சிறுமி சாவு… எச்சரிக்கை!

image

ஆந்திராவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி உயிரிழந்தார். பல்நாட்டைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் இருந்த வேக வைக்காத கோழி இறைச்சியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை பாதித்த நிலையில் பலியானார். 2021-ல் பறவை காய்ச்சலுக்கு ஹரியானாவில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து 2ஆவது உயிரிழப்பு தற்போது நேரிட்டுள்ளது. ஆகவே, இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள். SHARE IT!

error: Content is protected !!