India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ள அவர், குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதன்படி, புதுமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கும் புதிய திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கிறார். நாயை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மொரியா சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அதிபர் பதவியிலிருந்து 2018இல் விலகிய அவருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் 3 மாதங்களில் விடுதலையான ஜூமா, அண்மையில் புதிய கட்சி துவங்கியநிலையில், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிகளவில் வெற்றி பெறுவார்கள் என்று இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனு கொடுத்தது குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும் எனக் கூறிய அவர், மோடியிடம் நேரில் சரணாகதி; வெளியில் வீரவசனம் என்பதே திமுகவின் கொள்கை. அதிமுகவை வேண்டுமென்ற திமுகவினர் விமர்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டை போலவே, ஏப் முதல் ஜூன் வரையிலான காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது, கிசான் விகாஸ் பத்திரம் 7.5% வட்டி, பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்(PPF) 7.1% வட்டி, சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் 8.2% வட்டி, சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு 31ஆம் தேதி முடிவதால், நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) வங்கிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் உமர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 19ஆம் தேதி அவருக்கு இரவு உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக போகிறோம். நீதிமன்றம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை, இதற்கு ரூ.1,700 கோடி செலுத்தும்படி ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியிருப்பது காங்கிரசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

*ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் பாஜகவை வீழ்த்த வேண்டும் – திருமாவளவன்
*ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர் செய்து கொண்டிருக்கிறோம் – அதிபர் புதின்
*திருமணமான பெண்கள் குங்குமம் வைப்பது மதக் கடமை – இந்தூர் குடும்ப நீதிமன்றம்
*இந்திய வங்கிகளில் 10 ஆண்டுகளில் ₹5.30 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளது – ஆர்பிஐ
*ஆசிய கூடைப்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது.

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் அக்கட்சியை சேர்ந்த ஜோதிமுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இவர் கடந்த மக்களவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர் திலகபாமா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஜோதிமுத்தை மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.