India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

EDயால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அந்தப் பதவியில் நீடித்தால், ஆம் ஆத்மி கட்சி பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். முறைகேடு புகாரில் கைதானதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டவிதிகள் இல்லை என்றாலும், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அது வழிவகுக்கும் எனக் கூறிய நிபுணர்கள், மத்திய அரசும் அதனை துரிதப்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

➤ தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். ➤ மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் ➤ தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் மோடிக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் ➤ தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க உள்ளது – அண்ணாமலை ➤ ஐ.பி.எல் : பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி.

இன்று (மார்ச் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

நடப்பு ஐ.பி.எல் சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரவீந்திரா 37 ரன்கள் எடுத்தார்.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆம் ஆத்மி கட்சி அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, டெல்லி முதல்வராக அவரே தொடர்வாரா? அல்லது தனது மனைவியையோ அல்லது முக்கிய அமைச்சர்களில் ஒருவரை முதல்வராக தேர்வு செய்து அவர்கள் மூலமாக கெஜ்ரிவால் ஆட்சியை வழிநடத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ராதிகா சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான X-இல் தெரிவித்துள்ளதாவது, ” விருதுநகர் தொகுதியில் மோடியின் ஆசீர்வாதத்தால் நிச்சயம் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வேன். 400 தொகுதிகளில் வெற்றி என்பதில் விருதுநகர் தொகுதியின் வெற்றியும் கண்டிப்பாக இருக்கும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தின் அச்சாரமான மனைவியை கணவர் சந்தோஷமாக வைத்து கொண்டால், வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. இதற்கு கீழ்காணும் எளிய வழிமுறையை நாம் கடைபிடிக்கலாம். 1) உங்களது அன்பை அடிக்கடி வார்த்தையால் வெளிப்படுத்துங்கள் 2) சமையலை பாராட்டுங்கள் 3) அழகாக இருக்கிறாய் என அடிக்கடி கூறுங்கள் 4) பிறந்த நாள், திருமண நாளுக்கு பரிசளியுங்கள் 5) மனைவியின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்

கட்சி வற்புறுத்தியதால் வேறு வழியின்றி போட்டியிடுவதாக பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. ஆனால், பாஜக தலைமை தேர்தலில் போட்டியிட கூறினார்கள், அதனால் நாமக்கல் தொகுதியில் களம் இறங்கியுள்ளேன். நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவேன். தமிழக மக்கள் மோடி மீதுள்ள அன்பின் காரணமாக எனக்கு வாக்களிப்பார்கள்” என்றார்.

சனிபகவான் சிம்ம ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்கிறார். அதோடு சுக்கிரனும் இடமாற்றம் செய்ய விருப்பதால் மேஷம், ரிஷபம், மகரம், மிதுனம் ஆகிய 4 ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்க இருக்கிறது. நிதி விஷயங்களில் முன்னேற்றம், குடும்பம் செழித்து தழைக்கும், மன நிம்மதி கிடைக்கும், வாழ்வில் இவ்வளவு நாட்கள் ஏன் என்றே தெரியாமல் சந்தித்து வந்த இன்னல்கள் நீங்கி ஒளி பிறக்கும்.

பிரதமர் மோடியின் பூடான் பயணத்தில், இந்தியா – பூடான் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. பூடானில் புதிய விமான நிலையம் அமைப்பது, அசாமின் கோக்ரஜார் மற்றும் வங்காளத்தின் பானர்ஹாட் ஆகிய இடங்களில் இருந்து பூடானுக்கு ரயில்கள் இயக்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2019-2024 இல் பூடானுக்கு ரூ.5000 கோடி நிதியுதவி வழங்கிய இந்தியா, அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி வழங்க முன்வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.