India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியா 2’ – ஜூன் ▶அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ – ஆகஸ்ட் ▶வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘G.O.A.T’ – செப்டம்பர் ▶ரஜினி நடிக்கும் வேட்டையன் – அக்டோபர் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும், அமரன், தங்கலான், விடாமுயற்சி, கங்குவா உள்ளிட்ட படங்களின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6), தர்ஷன் (3) ஆகியோரை கடத்தி சென்ற வெங்கடேஷ், அடித்தே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாண்டு காலம் ஆட்சி செய்த பாஜக படுதோல்வி அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். மக்களவைத் தேர்தலில் முக்கிய பிரச்னைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டிய அவர், பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது. சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. அன்றாட வாழ்வாதார பிரச்னைகளை தீர்ப்பதில் பாஜக தோல்வி அடைந்ததை மக்களே உணர்ந்துள்ளனர் என கூறியுள்ளார்.

சமூகநீதி குறித்து பேச திமுகவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் அருகதை இல்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் காட்டமாகக் கூறியுள்ளார். ஊட்டியில் பேசிய அவர், அருந்ததியர்களுக்கு இருக்கின்ற ஒரே ரிசர்வ் தொகுதி நீலகிரி. இங்கு கூட இந்த சமுதாய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. சமத்துவம் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? இந்தத் தொகுதியில் 2ஜி-க்கும், மோடிஜி-க்கும் இடையில் தான் போட்டி எனக் கூறினார்.

உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்க எரிசக்தி உற்பத்தி மையம், குஜராத்தின் காவ்டா பகுதியில் உள்ளது. அதானி குழுமம் சார்பில் சூரிய மின்சக்தி மையம், காற்றாலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் 538 சதுர கிலோ மீட்டருக்கும் கூடுதலான நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு பெரிதாகும். தற்போது அங்கு 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் டோக்கன் கொடுத்து ஏமாற்றி வென்றவர் டிடிவி தினகரன் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தினகரன் தந்த டோக்கனை கையில் வைத்துக்கொண்டு மக்கள் காத்திருக்கின்றனர். தேனி மக்கள் அவரை நம்ப வேண்டாம் எனக் கூறினார்.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக வெப்ப அலை வீசும் என்பதால், மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாள்களே இருக்கும் நிலையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் & பாஜகவின் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பண்டைய பாண்டிய தலைநகரான மதுரையிலும், காங்கிரஸின் ராகுல் காந்தி சேர நிலமான கோவையிலும் இன்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். ஜனநாயகப் போரில் யார் வெல்வார்கள் என ஜுன் 4ஆம் தேதி தெரியும்.

RCB அணிக்கு எதிரான லீக் போட்டியில், 5 விக்கெட்டுகள் எடுத்து MI அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆட்டநாயகன் விருது பெற்ற பின்பு பேசிய அவர், “எப்போதும் வித்தியாசமாக பந்து வீச பயிற்சி எடுப்பது, பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அலசுவது, ஈகோ பார்க்காமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பந்து வீசுவது ஆகியவைதான் என்னுடைய வெற்றிகரமான பவுலிங்கிற்கு காரணம்” என்றார்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். அதில், வெப்ப அலையை சமாளிக்க மத்திய – மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், குளுகோஸ், குடிநீர் விநியோகம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.