News April 12, 2024
சேர நாட்டில் ராகுல்; பாண்டிய நாட்டில் அமித்ஷா

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாள்களே இருக்கும் நிலையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் & பாஜகவின் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பண்டைய பாண்டிய தலைநகரான மதுரையிலும், காங்கிரஸின் ராகுல் காந்தி சேர நிலமான கோவையிலும் இன்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். ஜனநாயகப் போரில் யார் வெல்வார்கள் என ஜுன் 4ஆம் தேதி தெரியும்.
Similar News
News November 7, 2025
அதிமுக + விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை RB உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தவெகவும் CM வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை EPS அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் RB உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் மெகா கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
News November 7, 2025
2032-ல் 9 நாடுகள் பாதிக்கப்படலாம்

2032-ஆம் ஆண்டில் ஒரு சிறுகோள் நமது சூரிய மண்டலத்தின் வழியாக செல்ல உள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் பூமியை பாதுகாப்பாக கடந்து செல்ல 97.9% வாய்ப்பு உள்ளது. இருப்பினும், 2.1% மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி, மோதல் ஏற்பட்டால், எந்தெந்த நாடுகளில் பாதிப்பு ஏற்படும் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 7, 2025
கோவை பெண் கடத்தல்: புகார் எதுவும் வரவில்லை

கோவை இருகூர் தீபம் நகரில் இளம்பெண் ஒருவரை காரில் <<18222861>>கடத்தி செல்லும் சிசிடிவி<<>> காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண் மாயமானது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சியில் கார் நம்பர் தெரியவில்லை என கூறிய அவர், அது கண்டறியப்பட்ட உடன் உண்மை என்ன என்பது தெரியவரும் எனவும் விளக்கியுள்ளார்.


