India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நடவடிக்கை விவரங்களை வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகள் மீது துறை ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அவருக்கு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஏப்.25க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தனது கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்குமாறு விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுச் சின்னங்கள் ஒதுக்கப்படும். மற்ற கட்சி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சின்னத்தை கேட்டுப் பெற கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் பானை சின்னத்தை கேட்டிருக்கிறது விசிக.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என அமலாக்கத்துறை தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இவர்களைத் தொடர்ந்து, தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது ED வழக்கு பதிவு செய்துள்ளது. கொச்சி மினரல்ஸ் & ரூட்டெய்ல் நிறுவனம் வீணாவின் நிறுவனத்திற்கு முறைகேடாக பணம் வழங்கியதாக வந்த புகாரில் ED வழக்கு பதிவு செய்துள்ளது.

அருண் மாதேஷ்வரன் இயக்கும் இளையராஜாவின் பயோபிக் படத்தில், நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை எழுத உள்ள நிலையில், யார் இசையமைக்கப் போவது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு அவரது சிஷ்யன் தான் சரியாக இருப்பார் என, ஏ.ஆர்.ரஹ்மானை இப்படத்திற்கு இசையமைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நல்ல வரவேற்பை பெற்றது.

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானமும் ஏர் இந்தியா விமானமும் நேருக்கு நேர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர் இந்தியா விமானம் சென்னைக்கு புறப்பட தயாராக நின்றிருந்த நிலையில், ஓடுபாதையில் புறப்பட தயாரான இண்டிகோ விமானம் அதன் மீது மோதியது. இதில் இரண்டு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன. நல் வாய்ப்பாக 300 பயணிகளும் காயமின்றி தப்பினர். இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

பெரும் முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்கினால் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது என அமைச்சர் PTR தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என தலைமை பொருளாதார ஆலோசகர் நாகேஸ்வரன் கூறியதை சுட்டிக்காட்டிய அவர், சிறு குறு தொழில் முனைவோருக்கு பதில் பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் கொடுத்தால் இந்தப் பிரச்னையை எப்போதுமே சரி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு ₹1.48 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது மனைவியின் பெயரில் ₹2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு இரும்புப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு வந்ததாக குறிப்பிடும் அண்ணாமலை, எப்படி ₹3.5 கோடி சேர்க்க முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்.13ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் INDIA கூட்டணிக்கு 20 இடங்களில் வெற்றி கிடைக்கும் என திருவனந்தபுரம் காங்., வேட்பாளர் சசி தரூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து பேசிய அவர், “பாஜக ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி, பாஜகவை தோற்கடிக்க வேண்டும். கடந்த முறை போல, இந்த முறை பாஜகவால் வெற்றிபெற முடியாது. கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்., வெற்றிபெறும்” என்றார்.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.கே.சின்னசாமி பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், நான்கு முறை எம்எல்ஏ.,வாகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரான இவர் பாஜகவில் இணைந்துள்ளது, அதிமுகவிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.