News March 27, 2024
பானை சின்னம் கேட்டு விசிக மனு

தனது கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்குமாறு விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே பொதுச் சின்னங்கள் ஒதுக்கப்படும். மற்ற கட்சி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சின்னத்தை கேட்டுப் பெற கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் பானை சின்னத்தை கேட்டிருக்கிறது விசிக.
Similar News
News February 16, 2026
நம்பிக்கையில்லா தீர்மானம்… மார்ச் 9-ம் தேதி ஓட்டெடுப்பு

லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்நிலையில் இதற்கான ஓட்டெடுப்பு வரும் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி,118 MP-க்கள் கையெழுத்திட்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
News February 16, 2026
சுஜாதா பொன்மொழிகள்

*நேரம் ஒரு நதி போன்றது. நீங்கள் ஒரே நீரை இருமுறை தொட முடியாது. *அறிவு என்பது தெரிந்தவற்றை அடுக்கி வைப்பது அல்ல, தெரியாதவற்றைத் தேடிச் செல்வது. *பெண்களின் மெளனம் பல சமயம் சம்மதம் அல்ல, அது ஒரு பெரிய போராட்டத்தின் முடிவு. *நவீன உலகம் என்பது வசதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, சிக்கல்களின் தொகுப்பும்தான். *வாசிப்பு என்பது மூளைக்குச் செய்யும் உடற்பயிற்சி.
News February 16, 2026
பொய் பேசுவது ராகுலின் கொள்கை: அமித்ஷா

விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதாக ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பாடாது என அவர் கூறியுள்ளார். மேலும், ராகுல் பொய் பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் விவசாயிகள் பலிகடா ஆக்கியதாகவும் சாடியுள்ளார்.


