news

News March 29, 2024

தேர்தல் பத்திரம் ஊழல் கிடையாது

image

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சிகள் பணம் பெற்றதால்தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதை சரிபார்க்க முடிகிறது என்று கூறினார். மேலும், தேர்தல் பத்திரம் மூலம் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளதாக கூறிய அவர், பாஜக மீது மட்டும் குற்றம் சுமத்துப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

News March 29, 2024

மிடில் ஆர்டரில் சொதப்பும் டெல்லி

image

நடப்பு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதே. இது ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றையை போட்டியிலும் எதிரொலித்தது. எனவே, அந்த அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி முடியும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

News March 29, 2024

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் புதிய படம்

image

நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ள அவர், குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதன்படி, புதுமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கும் புதிய திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கிறார். நாயை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

News March 29, 2024

BREAKING: கோர விபத்து.. 45 பேர் பலி

image

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டரை கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மொரியா சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேரும் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 29, 2024

தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபருக்கு தடை

image

தென்னாப்பிரிக்காவில் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அதிபர் பதவியிலிருந்து 2018இல் விலகிய அவருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் 3 மாதங்களில் விடுதலையான ஜூமா, அண்மையில் புதிய கட்சி துவங்கியநிலையில், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2024

ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனு: இபிஎஸ் பதில்

image

அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிகளவில் வெற்றி பெறுவார்கள் என்று இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் பெயரில் 5 பேர் வேட்புமனு கொடுத்தது குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும் எனக் கூறிய அவர், மோடியிடம் நேரில் சரணாகதி; வெளியில் வீரவசனம் என்பதே திமுகவின் கொள்கை. அதிமுகவை வேண்டுமென்ற திமுகவினர் விமர்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

News March 29, 2024

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

image

2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டை போலவே, ஏப் முதல் ஜூன் வரையிலான காலாண்டிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது, கிசான் விகாஸ் பத்திரம் 7.5% வட்டி, பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட்(PPF) 7.1% வட்டி, சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம் 8.2% வட்டி, சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

News March 29, 2024

வங்கிகள் இன்று செயல்படாது

image

கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு 31ஆம் தேதி முடிவதால், நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) வங்கிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 29, 2024

ஸ்லோ பாய்சன் கொடுத்து தாதா கொலை?

image

உத்தர பிரதேசத்தில் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அவரது மகன் உமர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த 19ஆம் தேதி அவருக்கு இரவு உணவில் விஷம் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுக போகிறோம். நீதிமன்றம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

News March 29, 2024

ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி காங்கிரஸுக்கு நோட்டீஸ்

image

வட்டியுடன் அபராதமாக ரூ.1,700 கோடி செலுத்தக்கோரி, காங்கிரஸுக்கு ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரசின் வங்கி கணக்குகளை ஏற்கெனவே முடக்கிய ஐ.டி., ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது. இந்நிலையில், 2017-18 மற்றும் 2020-21க்கு இடைப்பட்ட 4 நிதியாண்டுகளுக்கு, உரிய வருமான வரி செலுத்தவில்லை, இதற்கு ரூ.1,700 கோடி செலுத்தும்படி ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியிருப்பது காங்கிரசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

error: Content is protected !!