news

News April 4, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 04) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 4, 2025

இப்போதுதான் ரூ.50 கோடி.. விக்ரம் மார்க்கெட் என்னாச்சு?

image

விக்ரமின் வீர தீர சூரன் படம், 7 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் தடை காரணமாக முதல் நாள் (மார்ச் 27) மாலையில்தான் படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற போதும், ஒரு பெரிய நடிகரின் படத்துக்கான வசூல் இது இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. பிரதீப் ரங்கநாதனின் படமே 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலிக்கும்போது, விக்ரமிற்கு இது கம்மி என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

News April 4, 2025

தம்பதிகள் உறவு கொள்ள ஒருநாள் லீவு…!

image

ஆச்சரியமா இருக்கா? ரஷ்யாவில் லெனின் பிறந்த உல்யனோவ்க் பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப். 12-ம் தேதியை கருத்தரிப்பு நாளாக அறிவித்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தாண்டு ஜூன் 12-ம் தேதி ரஷ்ய தினத்தில் (9 மாதங்கள்) குழந்தை பெறுபவர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது. மக்கள் தொகையை அதிகரிக்க இந்த நடைமுறை அங்கு செயல்பாட்டில் இருக்கிறதாம்.

News April 4, 2025

IPL: கொல்கத்தா அணி அபார வெற்றி…!

image

SRH அணியை வீழ்த்தி KKR அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த KKR அணியில், வெங்கடேஷ் ஐயர்(60), ரகுவன்ஷி(50) அரைசதம் விளாச, அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 200 ரன்கள் குவித்தது. கடினமான இலக்குடன் களமிறங்கிய SRH, தொடக்கத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனால், இறுதிவரை போராடியும் பலனில்லை. KKR வீரர்கள் வருண், அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News April 4, 2025

ராசி பலன்கள் (04.04.2025)

image

➤மேஷம் – வரவு ➤ரிஷபம் – லாபம் ➤மிதுனம் – அசதி ➤கடகம் – அச்சம் ➤சிம்மம் – துணிவு ➤கன்னி – சினம் ➤துலாம் – புகழ் ➤விருச்சிகம் – பாராட்டு ➤தனுசு – நலம் ➤மகரம் – உதவி ➤கும்பம் – ஓய்வு ➤மீனம் – நட்பு.

News April 4, 2025

10 மாவட்டங்களில் இரவில் மழைக்கு வாய்ப்பு

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லையில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News April 4, 2025

நடிகை ஷிவானிக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி?

image

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி, சில படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான அவரின் புகைப்படத்தில் முகம் வெகுவாக மாறியிருந்தது. இதனால் அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதை மறுத்த ஷிவானி, ஒரு வருடமாக ஹெல்தி டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதாகவும், அதனால் முகம் மாறியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அவர் சொல்வது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? கீழே பதிவிடுங்க.

News April 3, 2025

வஃக்பு: மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பலம் என்ன?

image

வஃக்பு வாரிய திருத்த மசோதா, மக்களவையை அடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மசோதாவை நிறைவேற்ற 125 MP-க்கள் பலம் பாஜக கூட்டணிக்கு உள்ளது. இதில் பாஜக 98, ஜேடியூ 4, என்சிபி 3, டிடிபி 2, நியமன MP-க்கள் 6 பேர் அடங்குவர். எதிர்க்கட்சிகளுக்கு 88 MP-க்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் 27, திரிணாமுல் 13 MP-க்கள் அடங்குவர். பிஜேடியின் 7 MP-க்கள் ஆதரவு கிடைத்தால் பலம் கூடும்.

News April 3, 2025

ரூ.13,800 கோடி கணக்கில் வராத சொத்து வெளிவந்தது

image

பனாமா பேப்பர்ஸ் கசிவு எதிரொலியாக இந்தியாவில் கணக்கில் வராத ரூ.13,800 கோடி மதிப்பு சொத்துகள் வெளிவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016இல் புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கணக்கில் காட்டாது மறைத்த சொத்துகள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் இதன் எதிரொலியாக பல ஆயிரம் கோடி சொத்துகள் வெளிவந்து ரூ.145 கோடி வரி வசூலிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

News April 3, 2025

ஜேடியு கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகல்

image

வஃக்பு சட்ட (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிதீஷ்குமாரின் ஜேடியுவில் இருந்து 2 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். மக்களவையில் நேற்று அந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் ஜேடியு கட்சி ஆதரவு அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேடியு சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அஸ்ரப் அன்சாரி, மூத்த தலைவர் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் விலகியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!