news

News April 23, 2025

BREAKING: இபிஎஸ் விருந்தில் 4 MLAக்கள் ஆப்சென்ட்

image

பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் MLA-க்களை சமாதானப்படுத்த சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ் விருந்து வைத்து வருகிறார். இவ்விருந்தில் அதிமுக மூத்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அவரை தொடர்ந்து சூலூர் MLA கந்தசாமி, பவானிசாகர் MLA பண்ணாரி, திண்டிவனம் MLA அர்ஜுனனும் புறக்கணித்துள்ளனர். இது அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது.

News April 23, 2025

EPS-ன் விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

image

ADMK MLA-க்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார். பாஜகவுடன் கூட்டணியமைத்திருப்பதால், தலைமை மீது MLAக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், செங்கோட்டையன் இந்த விருந்துக்கு வரவில்லை. இது, EPS vs செங்கோட்டையன் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

News April 23, 2025

ஜாமின் கொடுத்ததே தவறு: ஒப்புக்கொண்ட நீதிபதிகள்

image

உங்களுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம்; அதனை நாங்கள் இப்போது ஒப்புக் கொள்கிறோம் என்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் பதவியில் தொடர்வதா (அ) ஜாமினா என்று முடிவெடுக்க, அவருக்கு 4 நாள்கள் கெடு விதித்துள்ளனர். ஜாமின் இல்லையெனில், சிறை செல்ல நேரிடும். என்ன முடிவெடுப்பார் செந்தில் பாலாஜி?

News April 23, 2025

சுக்கிரன் பெயர்ச்சி: கோடியில் புரளப் போகும் 5 ராசிகள்

image

சுக்கிரன் ஏப்.13-ல் மீன ராசியில் நிவர்த்தி அடைந்ததால், 2 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் அதிக நன்மை பெறும் ராசிகள்: *ரிஷபம்- பொருளாதார நிலை உயரும், தடைகள் நீங்கும் *கடகம்: தொழில், வேலையில் முன்னேற்றம், குடும்ப சூழல் மேம்படும் *துலாம்: பாசிடிவ் மாற்றங்கள். குடும்ப உறவு சிறக்கும். பயண வாய்ப்பு *விருச்சிகம்: வருமானம் உயரும், குடும்பத்தில் மகிழ்ச்சி *தனுசு: அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுதாக கிடைக்கும்.

News April 23, 2025

பாக்.-ஐ செதில் செதிலாக தகர்க்கும் இந்தியா?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. *பாக். ராணுவம், லஷ்கர் – இ – தொய்பா முகாம்களில் தாக்குதல். *வர்த்தகத்தை முழுமையாக ரத்து செய்வது. *சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. *ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள P5 நாடுகளிடம் பாகிஸ்தான் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது.

News April 23, 2025

அடுத்தடுத்து 5 விக்கெட்.. SRH கவலைக்கிடம்

image

MI-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் SRH அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த SRH அடுத்தடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா என நட்சத்திர வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், அந்த அணி 8.3 ஓவரில் 35/5 ரன்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.

News April 23, 2025

தீவிரவாதிகளின் தளபதியை சுற்றிவளைத்த ராணுவம்

image

J&K-வில் எண்கவுண்டர் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குல்காமில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட TRF தீவிரவாத அமைப்பின் தளபதி ஆஷிஃப் ஃபவுஜி உள்பட அனைத்து தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆஷிஃப் நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

News April 23, 2025

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்?

image

பிரதமர் மோடியின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.19-ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு மோடி பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நேற்று பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை அரங்கேறியிருக்கின்றனர்.

News April 23, 2025

ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

image

ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரல் 30-ம் தேதி என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி (ஒரு மாதம்) ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால் ஏப்.30 வரை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என அனைத்து ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

image

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!