India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக நாதக நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம் நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு சீமான் உறவு கொண்டு வருவதாகவும், தனது சுயலநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும், இனி அவருடன் பயணிப்பது தமிழின துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.
கேரளாவில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீஸ் கைது செய்தது. சிறுமியின் செயலில் வித்தியாசம் இருப்பதை பள்ளியில் ஆசிரியைகள் கவனித்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது, 23 வயது ஸ்நேகா மெர்லின், மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 14 வயது சிறுவனுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது புகார் உள்ளது.
கூகுள் chrome browserன் பழைய பதிப்பை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. chrome browserன் தற்போதைய பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட முடியும். இதை தடுக்க, லேட்டஸ்ட் வெர்சனை இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை TN அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு +2, உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 25-35க்குள் இருக்க வேண்டும்.
▶கையாலாகாதவனுக்கு கடவுள் துணை; அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணரமுடியாத உனக்கு தலைவிதி. ▶பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும். ▶முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது; அறிவு தீப்பிடிக்க சற்று தாமதமாகும். ▶விதி என்பது ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும் – தந்தை பெரியார்.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு, பாலின வேறுபாடின்றி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை <
அடுத்த வாரம் IPL தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பெங்களூருவில் உள்ள NCA இன்னும் அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் வரும் 23ம் தேதி SRH அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. பங்கேற்றாலும், பேட்டிங் மட்டும்தான் செய்வார். விக்கெட் கீப்பிங்கில் இருந்து விலக்கி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
டிரம்பின் ஹெலிகாப்டரில் மஸ்க்கின் மகனை ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புளோரிடாவில் உள்ள தனது வீட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் மஸ்கின் மகன் சென்றார். சிறுவன் ஹெலிகாப்டரில் ஏற சிரமப்பட்டபோது, டிரம்ப் அவனுக்கு உதவினார். கடந்த சில நாட்களாக மஸ்க் தனது மகனை அமெரிக்காவில் நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.
WPL பைனலில் DC அணியை வீழ்த்தி, MI அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த MI அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார். அத்துடன், இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த MI அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார். மேலும், நாட் சீவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 208 ▶குறள்: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. ▶பொருள்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
Sorry, no posts matched your criteria.