India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேளாண் பட்ஜெட்டை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முன்னதாக இதை நாங்கள் கூறிய போது அமைச்சர் பெரியகருப்பன் ஏற்க மறுத்ததாக விமர்சித்தார். மேலும், நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற வாக்குறுதிகள் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் வகையில், உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைந்து இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். மேலும், இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள், சிறு,குறு வணிகர்களும் நேரடியாகப் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
கலியுகத்தில் யாரை நம்பியும் வெளியில் செல்ல முடியவில்லை என சொல்லுவார்களே அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது இச்சம்பவம். பாலக்காட்டில் தோஷத்தை கழிக்க பூஜை என ஜோதிடரை வரவழைத்து, அவரை மிரட்டி பெண்ணின் அருகில் நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்துள்ளது ஒரு கும்பல். 4.5 பவுன் நகை, ₹5,000ஐ அபேஸ் செய்த கும்பலை சேர்ந்த 44 வயது பெண் கைமூனா சிக்கியுள்ளார். 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். 5வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தும், விவசாயிகளுக்கு என்ன பலன் கிடைத்தது? என கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் வல்லவர்கள் என்றும் சாடியுள்ளார். பல்வேறுத் துறைகளை ஒன்றிணைத்து அவியல், கூட்டு போன்று இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்கள் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
TVKவில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் தென் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை அங்கீகரிக்கும் வகையில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சென்னையில், வரும் 28ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது உயிர் பிரிந்தது. #RIP
ஈராக் மற்றும் அமெரிக்கப் படைகள் கூட்டாக நடத்திய தாக்குதலில், ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அபு கதீஜா கொல்லப்பட்டார். உலக அளவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈராக் மற்றும் சிரியா தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான தங்கள் போராட்டம் தொடர்வதாக ஈராக் பிரதமர் முகமது சூடானி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 19ஆவது தவணை சற்று முன்பு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என நேற்று பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உங்கள் வங்கிக் கணக்கில் ₹1,000 வந்துவிட்டதா? கமெண்ட்ல சொல்லுங்க.
வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ. 45,661.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகள் நலனுக்கான திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக, வெளிநாட்டு தொழில்நுட்பங்களை அறிய வசதியாக விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச்செல்வது, அதிக விளைச்சலை காட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தான் கேமியோ ரோலில் நடித்த ராபின்ஹுட் படத்தின் புரோமோஷனுக்காக, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஹைதராபாத் வருகிறார். வெங்கி குடுமுலா இயக்கிய இப்படத்தில் ஸ்ரீலீலா, நிதின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் 22ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் டேவிட் வார்னர் பங்கேற்க உள்ளார்.
சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏழைப்பெண்களுக்கு நாட்டுக்கோழி பண்ணைகளை அமைத்துக்கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிறு பால் பண்ணைகள் அமைக்க 4% மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.