India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிஹாரைச் சேர்ந்த தேவி, கடந்த பிப்.23ல் தனது குடும்பத்துடன் மகா கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். கும்பமேளா கூட்டநெரிசலில் தொலைந்து போனவர், அங்கிருந்து ரயில் ஏறி ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அவரை, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் சோனி தேவி தங்க இடம் கொடுத்து பராமரித்துள்ளார். அவரை போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட, தேவியின் மகன் தன் தாயைக் கண்டுபிடித்து அழைத்து சென்றுள்ளார்.
திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடிகை ரூபினியிடம் ₹2.27 லட்சம் மோசடி செய்துள்ளனர். ரூபினி, வெங்கடாசலபதியின் தீவிர பக்தை என தெரிந்து கொண்ட சரவணன் என்ற நபர் அவரை அணுகியுள்ளார். மேலும், பல பிரபலங்களுக்கு ஸ்பெஷல் தரிசனங்களை ஏற்பாடு செய்ததாக போலியான புகைப்படங்களை காட்டி சரவணன் மோசடி செய்துள்ளார். 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் ரூபினி நடித்துள்ளார்.
‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வேகமாக பரவிய நிலையில், அது தற்போது டெலீட் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவை பார்த்தவர்கள், ரவி மோகன் வெறித்தனமாக வில்லத்தனம் காட்டுவதாகவும், நிச்சயம் சம்பவம் உறுதி எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இலங்கையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது SK கெரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த வங்கிகள் சங்கம் (UFBU) சார்பில், வரும் 24, 25ஆம் தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு நாள்களும் வங்கிகள் செயல்படாது. இந்திய வங்கிகள் அசோசியேஷனுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், UFBU இந்த ஸ்டிரைக்கை அறிவித்துள்ளது. வாரத்திற்கு 5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளனர்.
PNB வங்கியில் 350 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஆபீசர்-கிரெடிட், ஆபீசர்-இன்டஸ்ட்ரீ, மேனேஜர்-ஐடி, சீனியர் மேனேஜர்-ஐடி, மேனேஜர் -டேட்டா சயின்டிஸ்ட், மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி, சீனியர் மேனேஜர்- சைபர் செக்யூரிட்டி ஆகியவை அந்த பணியிடங்கள். இதற்கான விண்ணப்பப்பதிவு <
மதவெறியர்களால் ஹோலி பண்டிகை சிறுபான்மையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பண்டிகையாக மாறியுள்ளதாக முன்னாள் J&K முதல்வர் மெஹ்பூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களும் இதற்கு துணை போவதாகவும், இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது எனவும் அவர் கூறியுள்ளார். இந்து vs முஸ்லிம் என எதிரெதிராக நிறுத்துவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
IPL 2025இல் விளையாடப் போகும் 10 அணிகளின் கேப்டன்கள் யார்-யார் என பார்க்கலாம். 1) சிஎஸ்கே – ருதுராஜ் கெய்க்வாட் 2) ஆர்சிபி – ரஜத் படிதார் 3) கேகேஆர் – அஜிங்யா ரஹானே 4) எல்எஸ்ஜி – ரிஷப் பன்ட் 5) பஞ்சாப் – ஸ்ரேயாஸ் ஐயர் 6) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பேட் கமின்ஸ் 7) ஆர்.ஆர். – சஞ்சு சாம்சன் 8) குஜராத் டைட்டன்ஸ் – சுப்மன் கில் 9) மும்பை இந்தியன்ஸ் – ஹர்திக் பாண்டியா 10) டெல்லி அணி- அக்சார் படேல்.
தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்திருந்த போதிலும், அதிலுள்ள சில அம்சங்களை<<15759887>> விஜய் <<>>மனதார பாராட்டியும் இருக்கிறார். தமிழகம் முழுவதும் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத்தொகையில் சலுகை போன்ற அறிவிப்புகளை மனதார வரவேற்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ED குற்றஞ்சாட்டியதை வைத்து, பணமழையில் செந்தில் பாலாஜி குளிப்பது போன்ற படத்தை ‘லக்கி பாலாஜி’ என தலைப்பிட்டு ஜெயக்குமார் பகிர்ந்துள்ளார். பாட்டிலுக்கு 10 ரூபாய் என ஆரம்பித்து பல்லாயிரம் கோடிகளில் ஊழல்!, மக்களை போதைக்கு அடிமையாக்கி, பணமாக்கிய பாவத்தின் விளைவை விரைவில் உணர்வீர்கள்! வீழ்வீர்கள்! என ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
மார்ச் 13ஆம் தேதி புதனும், சுக்கிரனும் மீன ராசியில் இணைந்துள்ளனர். அதே நாளில், சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த இரு விசேஷ நிகழ்வுகளால் மேஷம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி உண்டாகும். கவலைகளை சிதறடிப்பீர்கள். தாம்பத்ய வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் மேம்படும். காதல் திருமணம் கைக்கூடும்.
Sorry, no posts matched your criteria.