news

News April 29, 2025

தகிக்கும் கோடையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

image

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உங்களது உடல்நலனை காக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. *நாள்தோறும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் அருந்துதல். *உச்சி வெயிலில் (காலை 11 – மாலை 3) வரை தேவையின்றி வெளியே செல்லாமல் இருங்கள். *உடல் வெப்பநிலையைத் தணிக்க இருமுறை குளியுங்கள்.* பருத்தி ஆடைகளை அணியுங்கள்.* எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிருங்கள். *செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும். SHARE IT.

News April 29, 2025

IPL லாபத்தில் 10 IIT-கள் கட்டலாம்: ஷாக் ரிப்போர்ட்

image

3 ஆண்டுகளில் IPL லாபத்திற்கு 40% வரி விதிக்கப்பட்டிருந்தால் ₹15,000 கோடி கிடைத்திருக்கும், இதன் மூலம் 10 ஐஐடிக்கள் (அ) தேசிய உள்ளார்ந்த தொழில்நுட்ப நிதியை உருவாக்கியிருக்கலாம் என IISc பெங்களூரு பேராசிரியர் மயங்க் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். IPL டீம் உரிமையாளர்கள் கூடுதலாக ₹480 கோடி வரை ஈட்டியிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் ₹6,000 கோடியை ஆராய்ச்சி பணிகளுக்கு அளித்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

பாக். பேரழிவை சந்திக்கும்.. தீர்க்கதரிசி கணிப்பு

image

பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவரது கணிப்புகள் 85% துல்லியமாக பலித்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா-பாக். இடையே பதற்றம் நிலவும் நிலையில், 2025-ல் பாக். பேரழிவை சந்திக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார். இதனால் நிச்சயம் இந்தியா-பாக். போர் மூளும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதெல்லாம் சும்மா என இன்னொரு தரப்பினர் மறுக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 29, 2025

BSF வீரரை மீட்பது எப்போது? காங். கேள்வி

image

பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை(BSF) வீரரை மீட்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என காங். கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்.23-ல் ஃபெரோஸ்பூர் அருகே எல்லை தாண்டியதாக கூறி, பூர்ணம் சாஹு என்ற BSF வீரர் பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பஹல்காம் தாக்குதலால் சாஹுவை மீட்பது குறித்த பேச்சுவார்த்தை தடைபட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

News April 29, 2025

சூர்யா ரசிகர்களுக்கு ரெடியாகும் ட்ரீட்

image

‘ரெட்ரோ’, = RJ பாலாஜி படம் என அடுத்தடுத்து சூர்யாவுக்கு படங்கள் வர உள்ளன. ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதோ வாடிவாசலுக்குதான். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். நீங்களும் ‘வாடிவாசல்’ படத்துக்கு வெயிட் பண்றீங்களா?

News April 29, 2025

மைனாரிட்டி அரசு… மீண்டும் பிரதமரான மார்க் கார்னி

image

கனடா நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் மார்க் கார்னி பிரதமரானார். மொத்தமுள்ள 343 தொகுதிகளில் 168 இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 172 இடங்கள் லிபரல் கட்சிக்கு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது அவர்கள் ஆட்சி அமைக்கின்றனர்.

News April 29, 2025

மோடியும், கெஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும்

image

2010 காமன்வெல்த் போட்டி முறைகேடு வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்ற ED-ன் அறிக்கையை டெல்லி கோர்ட் ஏற்றுக்கொண்டது. 13 ஆண்டுகள் நடந்த விசாரணையில் காமன்வெல்த் போட்டியின் ஏற்பாட்டு குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என ED கூறியது. இந்த ஊழலை வைத்து காங்கிரசை விமர்சித்த மோடியும், கெஜ்ரிவாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

News April 29, 2025

‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

image

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

News April 29, 2025

ஷேக் முஜிபுர் PHOTO கொண்ட ரூபாய் நோட்டுகள் வாபஸ்

image

ஒரே இரவில் பழைய ₹500, ₹1000 செல்லாது என்று PM மோடி அறிவித்தது போலவே வங்கதேச நாட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தந்தையாக கொண்டாடப்படும் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி அறிவித்ததால், பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் தேவைக்காக, விரைவில் புதிய ரூபாய் நோட்டுகளை சந்தையில் விட அந்நாட்டு திட்டமிட்டுள்ளது.

News April 29, 2025

RCB கோப்பை வெல்லுமா? IPL சேர்மன் ஹிண்ட்

image

இதுவரை கோப்பையை வெல்லாத அணியே IPL 2025-ஐ வெல்ல வேண்டும் என IPL சேர்மன் அருண் துமால் கூறியுள்ளார். DC, RCB அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அருண், PBKS இறுதிப்போட்டிக்கு முன்னேறியதையும் குறிப்பிட்டார். தங்களுக்கு ஒரு புது வெற்றியாளர் தேவை என்றும், அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சி அடைவோம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி RCB புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

error: Content is protected !!