News April 29, 2025
‘பாகிஸ்தான் வாழ்க’ என்றவர் அடித்துக் கொலை

‘பாகிஸ்தான் வாழ்க’ என்று சொன்னதற்காக ஒருவர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில், மங்களூருவில் கடந்த 27-ம் தேதி நடந்த உள்ளூர் கிரிக்கெட் மேட்சின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருவர் முழக்கமிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிலர் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
Similar News
News July 8, 2025
மினிமம் பேலன்ஸ் அபராதத்தை ரத்து செய்ய திட்டம்

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச மினிமம் பேலன்ஸை பராமரிக்காவிட்டால், அபராதத் தொகை வசூலிக்கும் நடைமுறையை கைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு பதிலாக டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக வருவாய் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
News July 8, 2025
ரயில் விபத்தில் நுழைந்த மொழி பிரச்னை

கடலூர், செம்மங்குப்பம் விபத்தில் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தினால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறியது பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் தமிழர்களுக்கு மத்திய அரசு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மொழியும் உள்நுழைந்துள்ளது.
News July 8, 2025
சம்பளத்தில் 33% வரை EMI செலுத்தும் மக்கள்

நடுத்தர வர்க்கத்தினரின் மாத சம்பளத்தில் 33% வரை EMI செலுத்துவதற்கே பயன்படுத்தப்படுகிறதாம். இதனால் அடிப்படை தேவைகளான மளிகை, போக்குவரத்து, வாடகை ஆகியவற்றை சிரமப்பட்டு சிக்கனமாக செய்கின்றனராம். இதனால் சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரம், சற்று அதிக வருமானம் பெறுபவர்களும் விதிவிலக்கின்றி 45% வரை லோன் செலுத்துகின்றனராம். இதற்கு விலையேற்றத்திற்கு ஏற்ற சம்பள உயர்வு இல்லாததும் காரணமாம்.