news

News March 27, 2025

CSK vs RCB: இவங்க தான் டாப்!

image

CSK- RCB அணிகள் இதுவரை 33 முறை மோதி உள்ளன. இதில் CSK 21, RCB 11 முறை வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களில் கோலி (1053) முதலிடத்திலும், தோனி (765) 2ஆம் இடத்திலும், ரெய்னா (616) 3ஆம் இடத்திலும் உள்ளனர். அதேபோல், அதிக விக்கெட்கள் எடுத்தவர்களில் ஜடேஜா 18, பிராவோ 17, அல்பி மார்கல் 15 விக்கெட்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

News March 27, 2025

சனிப்பெயர்ச்சி: குபேரன் ஆகப்போகும் ராசிகள்

image

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, வரும் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாளில், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய மூன்று ராசியினருக்கு குபேர யோகம் அடிக்கப் போகிறது. இவர்களின் பணப் பிரச்னைகள் அனைத்தும் இந்த சனிப்பெயர்ச்சியோடு தீரும் என்று ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.

News March 27, 2025

அல்லு அர்ஜுன் பார்முலாவில் ராம் சரண்?

image

தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் சரணின் பிறந்தநாளையொட்டி அவரது 16வது படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. Peddi என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் பீடியை பற்றவைத்து முறைத்து பார்ப்பது போன்ற இருந்தது. இது புஷ்பா பட அல்லு அர்ஜுன் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இன்னொரு போஸ்டர் யஷின் KGF போல் உள்ளதாகவும் கூறிவருகின்றனர்.

News March 27, 2025

சினிமாவில் நடிக்கும் கோலி?

image

மேலே உள்ள போட்டோவைப் பார்த்தும், என்னது கோலி சினிமாவில் நடிக்கிறாரா? என அதிர்ச்சியாக வேண்டாம். அது துருக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் டோகன் பே. Ertugrul எனும் துருக்கிய சீரிஸில் இருந்து புகைப்படம் ஒன்றை ஸ்னாப் அடித்து, பயனர் ஒருவர் பதிவிட சமூகவலைதளம் ஆடிப்போனது. முதலில் பலரும் இவரை கோலி என்றே நினைத்தனர். பின்னரே உண்மை தெரியவந்தது. இருவரின் முக ஒற்றுமை எப்படி இருக்கு? நீங்க சொல்லுங்க.

News March 27, 2025

அப்பாவின் சந்தேகத்திற்கு பலியான பிஞ்சுக் குழந்தை

image

‘கருப்பான நமக்கு எப்படி வெள்ளை நிற குழந்தை பிறந்தது’ என மனைவியை டார்ச்சர் செய்த கணவர், பெற்ற மகளையே கொலை செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அக்ரம் ஜாவித்தின் மனைவி, இரண்டரை ஆண்டுக்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இருவரும் கருப்பாக இருந்த நிலையில், குழந்தை வெள்ளையாக இருந்துள்ளது. இதனால், மனைவியை தொடர் சித்ரவதை செய்துவந்த அவர், குழந்தையை கொன்றுவிட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.

News March 27, 2025

கண்ணை பறிக்கும் சல்மான் கான் வாட்ச்.. விலை ₹61 லட்சமா?

image

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் கூட்டணியில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் கையில் கட்டியுள்ள வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராம் ஜென்மபூமி பிரத்யேக எடிசன் வாட்ச்சான இதன் விலை ₹61 லட்சம். Jacob & Co என்ற பிரபலமான வாட்ச் பிராண்ட் இதனை வடிவமைத்துள்ளது.

News March 27, 2025

தமிழகத்திற்கான நிதி.. மத்திய அரசு வழங்க வலியுறுத்தல்

image

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. அதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து சுமூக தீர்வு காணவும், நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ₹2,152 கோடி நிதி நிலுவையில் உள்ளது.

News March 27, 2025

மரண வீட்டில் ஊடகங்கள் காசு பார்ப்பதா?

image

சினிமா பிரபலங்களின் வீட்டு துக்க நிகழ்வை, ஊடகங்கள் ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒருவரின் துயரை காசாக்க வேண்டுமா எனவும், ஒருவரின் மரணத்தை கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமா எனவும் அந்த சங்கம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. மரண வீடுகள் என்பது துயரத்தை பகிர்ந்துகொள்ளவும், மௌனிக்கப்படவும் வேண்டிய இடம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 27, 2025

இதெல்லாம் மார்ச் 31-க்குள் செய்ய வேண்டியவை!

image

புதுப்பிக்கப்பட்ட ITR படிவத்தை மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரியை சேமிக்க விரும்பினால் அதற்குள் சில முதலீடுகள் செய்து கொள்ளலாம். அதே போல், PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பதிவு செய்வதற்கும், பெண்கள், சிறுமிகள் மட்டுமே முதலீடு செய்யும் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கும் அன்றைய தினமே கடைசி நாளாகும். Share It.

News March 27, 2025

தொகுதி மறுவரையறை.. தெலங்கானாவில் தீர்மானம்

image

MP தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஒரே கட்சி ஆட்சியில் இருக்கவே, வடமாநிலங்களின் தொகுதிகளை அதிகரிக்க முற்படுவதாகவும், தங்கள் மாநில மக்களின் உரிமையை என்றும் விட்டுத்தரமாட்டோம் எனவும் அம்மாநில CM ரேவந்த் சூளுரைத்துள்ளார். மேலும், அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தொகுதி மறுவரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!