India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடவே கூடாது என சிலர் விரும்புவதாக சீமான் தெரிவித்துள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், ” மிகுந்த போராட்டத்துக்கு பிறகு எனக்கு மைக் சின்னத்தை கொடுத்துள்ளார்கள். ஏதாவது ஒன்றை தாருங்கள் என கேட்டும் அவர்கள் எங்களுக்கு சின்னம் தர விரும்பவில்லை. மக்கள் சின்னத்தை தேட மாட்டார்கள், என்னைத்தான் தேடுவார்கள், தேர்தல் முடிவில் இது புரியும்” என்றார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமர் பிரசாத் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல்கட்டமாக ஏப்.19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதில், தமிழக பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளதாக அமர்பிரசாத் ரெட்டி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 208/7 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 54 ரன்கள் அடித்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கடைசியில் களமிறங்கி அதிரடியாக ஆடிய ரமன்தீப் 35, ரிங்கு சிங் 23, ரசல் 64* ரன்கள் விளாசினர். SRH தரப்பில் நடராஜன் 3, மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார். பாஜக கூட்டணியில், அமமுகவுக்கு திருச்சி மற்றும் தேனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை நாளை தேனியில் நடைபெறும் கூட்டத்தில் தினகரன் அறிவிக்க உள்ளார். முன்னதாக தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில், கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது.
பாஜகவிற்கு வாக்களித்தால், காஷ்மீரின் நிலை நாளை நமக்கும் வரலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ‘இந்தியா கூட்டணி அமைய நான் காரணமாக இருந்தேன் என்பதால் என் மீது பிரதமருக்கு கோபம். பாஜகவின் பாணி ஒரு சர்வாதிகாரம். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நிதி கொடுக்காத பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்றார்.
வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை மறு உத்தரவு வரும் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், வெங்காய விலையை தொடர்ந்து கட்டுப்படுத்த இந்த தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க EDக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியும், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீத்திமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்துள்ள நீதிமன்றம், புதன்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் நேற்று களமிறங்கிய சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி, இனி வரும் போட்டிகளில் சில போட்டிகளில் விளையாடாமல் போக வாய்ப்புள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாட மாட்டார். இடையே சிறிய ஓய்வு எடுக்கலாம். அதனால் தான் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தோனி சிறப்பாக விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.