news

News March 17, 2024

இரண்டாவது குழந்தையை பெற்ற மறைந்த பாடகரின் தாய்

image

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 17, 2024

சித்தார்த்துடன் பார்ட்டிக்கு சென்ற அதிதி ராவ்

image

நடிகை அதிதி ராவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், இருவரும் இதற்கு பதில் கூறாமல் இருந்து வருகின்றனர். ஆனால், சமூக வலைத்தளத்தில் மாறி மாறி அன்பை பொழிவதும், பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வதுமாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு இருவரும் ஒன்றாக சென்ற போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

News March 17, 2024

BREAKING: சென்னையில் கட்டுக் கட்டாக பணம்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளது. சென்னையில் ரூ.1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

News March 17, 2024

ரோஹித் ஷர்மா மீது முகமது கைஃப் பரபரப்பு குற்றச்சாட்டு

image

ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா அடைந்த தோல்விக்கு ரோஹித் ஷர்மாவும், டிராவிட்டுமே காரணம் என்று முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கைஃப் அளித்துள்ள பேட்டியில், ” மந்தமான பிட்ச்சை அளித்தால், ஆஸ்திரேலியா தோற்கும் என 2 பேரும் நினைத்தனர். அதற்கு மாறாக, ஆஸ்திரேலிய அணி ஜெயித்து விட்டது. இதற்கு ரோஹித்தும், டிராவிட்டுமே காரணம்” எனக் கூறியுள்ளார்.

News March 17, 2024

சிஏஏ குறித்து தெளிவான நிலைப்பாடு இல்லை

image

சிஏஏ சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் காங்கிரஸ் முதலில் இடதுசாரிகள் பக்கம் நின்றதாக கூறிய அவர், பின்னர் நிலைப்பாட்டை மாற்றி பாஜகவுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார். மேலும் கேரளாவை சேர்ந்த 18 காங்., எம்.பிக்களில் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என்றும் அவர் சாடினார்.

News March 17, 2024

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன்

image

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை (E.D) 9வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் 8 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. சம்மன்களை எதிர்த்து கெஜ்ரிவால் தொடுத்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் வரும் 21ம் தேதி ஆஜராகும்படி E.D சம்மன் அனுப்பியுள்ளது.

News March 17, 2024

மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

image

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு புறப்பட்டார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழா, மும்பையிலுள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் நடைபெறுகிறது. இதில் காங்., மற்றும் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இன்றே தேர்தல் பிரச்சாரத்தை INDIA கூட்டணி தலைவர்கள் தொடங்க உள்ளனர்.

News March 17, 2024

மக்களவைத் தேர்தல் செலவு இவ்வளவா?

image

மக்களவைத் தேர்தலுக்கான செலவு 1.20 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தலுக்கு ஆகும் செலவுக்கு சமம் என்று கூறப்படுகிறது. இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்ய நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது என்றாலும், இதுவரை அதிகபட்சமாக 67% பேர் தான் வாக்களித்துள்ளனர்.

News March 17, 2024

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு வழக்கு

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மேலும் ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த புதிய வழக்கின் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை. இது தொடர்பாக இன்று காலை ஆம் ஆத்மி கட்சி செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2024

பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதல் விடுமுறை..?

image

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்.19 நடைபெறவுள்ளதால், 1 -9ம் வகுப்புக்கு முன்னதாகவே இறுதித்தேர்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் 1 & 2ல் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6ம் தேதி முடிவுக்கு வருவதால், அதன்பின்பு ( ஒருவாரம் கூடுதல் லீவ்) பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!