News March 17, 2024

இரண்டாவது குழந்தையை பெற்ற மறைந்த பாடகரின் தாய்

image

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தாயார் சரண் கவுருக்கு குழந்தை பிறந்துள்ளது. 58 வயதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை, சித்துவின் தந்தை பால்கர் சிங் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். சித்து கடந்த 2022இல் கொலை செய்யப்பட்ட பின், அவரது பெற்றோர்களான சரண் கவுர் (58) பால்கவுர் சிங் (60) ஐவிஎஃப் மூலம் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News July 11, 2025

‘நிபா’ வைரஸ் பரவல்.. பழங்களை கழுவி சாப்பிடுங்க

image

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள் வாயிலாக பரவும் தொற்று நோயாகும். குறிப்பாக பழ வகை வெளவால்கள், பன்றி போன்றவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT.

News July 11, 2025

கடன் வாங்காமல் சமாளிக்க… சிம்பிள் டிப்ஸ்!

image

அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்குவது என்ற காலம் மாறி, ஆடம்பரத்துக்காக தற்போது கடன் வாங்க தொடங்கி விட்டனர். ஆனால், இது பெரும் சிக்கல்களை உருவாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடன் வாங்காமல் இருக்க, இந்த சிம்பிள் டிப்ஸை பாலோ பண்ணுங்க
✦ஒரு குறிப்பிட்ட தொகை கையிருப்பு வெச்சிக்கோங்க
✦திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு சின்ன சேமிப்பு வேண்டும்
✦பங்குச் சந்தை, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

News July 11, 2025

கடன் வாங்கியவர்கள் நெஞ்சில் பாலை வார்த்த FM நிர்மலா

image

கடனை திருப்பி வசூலிக்கும்போது கஸ்டமர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு FM நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் Non-Banking Financial Company கூட்டத்தில் பேசிய அவர், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வழங்கும் கடன்கள் 24% ஆக உள்ளதாகவும், இது 2047-க்குள் 50% ஆக உயர்த்த வேண்டும் என்றார். இதனால் வரும் நாள்களில் பலருக்கும் கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!