news

News March 19, 2024

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

image

கோவை சாலைப் பேரணியில் தேர்தல் விதிகளை மீறியதாக பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாரளித்துள்ளது. இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், பிரதமரின் சாலைப் பேரணியில் 6 – 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் எனக் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News March 19, 2024

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம்

image

2024 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆஸி., வீரர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்க்கு பதிலாக, இங்கி., வேகப் பந்துவீச்சாளர் லூக் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 2 ஒருநாள் மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாடிய லூக் வுட், முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News March 19, 2024

சீமான் வழக்கில் விஜயலட்சுமிக்கு உத்தரவு

image

சீமான் வழக்கில் ஏப்.2ல் நேரிலோ, காணொலியிலோ ஆஜராக விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. விஜயலட்சுமி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை என காவல்துறை தெரிவித்ததால், ஆஜராக அவகாசம் அளித்து, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

News March 19, 2024

பாலிவுட்டுக்கு செல்லும் சுந்தர்.சி

image

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய சுந்தர்.சி அடுத்ததாக ஹிந்தி படமொன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது இரண்டு ஹீரோ கதை என்பதால் மற்றொரு நாயகனாக தமிழ் நடிகர் நடிக்கலாம் எனத் தெரிகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 19, 2024

சென்னை ரயில் நிலையத்தில் பெண் மீது தாக்குதல்

image

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் வான்மதி என்ற பெண்ணை அவரது கணவர் வெங்கடேசன் இரும்புக் கம்பியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக வான்மதியை வெங்கடேசன் தாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மனைவியை தாக்கிய வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மனைவி வான்மதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 19, 2024

தொன்மையான மொழி தமிழ் மொழி

image

உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி என பிரதமர் மோடி கூறியுள்ளார். சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் மொழி என்று பிறந்தது என யாருக்கும் தெரியாத அளவுக்கு, காலத்திற்கும் முந்தைய மூத்த மொழி தமிழ் மொழி என புகழாரம் சூட்டினார். மேலும், எனது நாட்டின் தமிழ் மொழி உலகிலுள்ள பிற மொழிகளை விடவும் தொன்மையானது என நெஞ்சை உயர்த்திக் கூறுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

உலக தரவரிசையில் முன்னேறிய லக்ஷயா சென்

image

இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென், உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். சமீபத்தில் நடந்த All England Open பேட்மிண்டன் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர், அரையிறுதி வரை முன்னேறினார். இதனால், BWF தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி தற்போது 13ஆவது இடத்தில் உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க உள்ளதால், BWF தரவரிசையில் டாப் 10க்குள் செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News March 19, 2024

திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு?

image

திமுக தேர்தல் அறிக்கையை நாளை வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்க கனிமொழி எம்பி தலைமையில் அக்கட்சி குழு அமைத்தது. அக்குழு, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு தயாரித்த அறிக்கையை நாளை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது. அதில், வாக்காளர்களை கவரும் வகையில், குறிப்பாக பெண்களை கவரும் வகையில் வாக்குறுதிகள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

News March 19, 2024

பெண்களுக்கு மாதம் ₹8000. சிறப்பு அறிவிப்பு

image

ஏழைப் பெண்களுக்காக மஹாலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு மாதம் ₹8,333 கிடைக்கும். இத்திட்டம் மக்களின் மத்தியில் வரவேற்பை பெறும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

News March 19, 2024

சிஏஏ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

image

சிஏஏவுக்கு தடை கோரி தாக்கலான மனுக்கள் குறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், பதில் அளிக்க 4 வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. இதைக்கேட்ட உச்சநீதிமன்றம், 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

error: Content is protected !!