India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு சரியான கொட்டு வைத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார். தலையில் எவ்வளவு கொட்டினாலும் அவருக்கு வலிக்காது. அவர் இரும்பு தலையர். ஆளுநரின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது அவரின் நடத்தைக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.
ஐபிஎல் 17ஆவது சீசன் தொடர் நாளை தொடங்க உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ சினிமா App-இல் இலவசமாக காணலாம். ருதுராஜ் (CSK) மற்றும் டு பிளெசிஸ் (RCB) தலைமையிலான அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
டெல்லி அரசு 2021இல் புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. டெல்லியில் மது விற்பனையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. 2022இல் பொறுப்பேற்ற புதிய தலைமைச் செயலர், அதில் ஊழல் இருப்பதாக கூறி, லெப்டினன்ட் கவர்னரிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதே ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையால் ஆம் ஆத்மி தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். முதல்வரை அடிபணிய வைக்க பாஜக பல தடைகளை ஏற்படுத்தி வருவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். இதை டெல்லி மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என கூறியுள்ளனர். இந்த வழக்கில் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
பாஜகவின் ஏஜெண்டாக செயல்படும் ஆளுநர் ரவி உடனே பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். “ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திமுக மீது உள்ள வன்மத்தால், அவர் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கவில்லை. ஆளுநரை வெளியேற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை நீதிமன்றத் தீர்ப்பு உணர்த்துகிறது’ என கூறியுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரிய கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து ED அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு விசாரணை நடத்தச் சென்றுள்ள நிலையில், கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் 3 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக நேரடியாக மோதவுள்ளது. கோவையில் கணபதி ராஜ்குமார் (திமுக), சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக), அண்ணாமலை (பாஜக). தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை (பாஜக), நீலகிரியில் ஆ.ராசா (திமுக), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (அதிமுக), எல்.முருகன் (பாஜக)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தியது. இது தொடர்பாக தொடர்ந்து 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கைது செய்ய விலக்கு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியை ஏற்கெனவே தமாகாவுக்கு பாஜக வழங்கியிருந்த நிலையில், குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து மறு அறிவிப்பை வெளியிட்ட பாஜக, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
அம்பேத்கர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார் என்பது நமக்கு தெரிந்தது தான். இன்று, அதேபோல் சிறுவன் ஒருவன் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, ‘கல்வி இல்லாத குழந்தைகள், சிறகு இல்லாத பறவைகள் போல’ என குறிப்பிட்டுள்ளார். அரசு கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.