India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனுஷைப் போல் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். கள்வன் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், “ஜி.வி நடித்த கள்வன் பட டிரெய்லரைப் பார்க்கும் போது அவரது நடிப்பு நிறைய மாறி இருப்பதை பார்க்கிறேன். பொல்லாதவன் படத்திற்கு இசையமைத்த போது தனுஷ் நடிப்பதை மறைந்து நின்று பார்த்து கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன். இந்த படம் அவரை பெரிய அளவில் பேச வைக்கும்” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் உ.பி அமேதி, கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுகிறார். அங்கு அவரை எதிர்த்து களம் காணும் பாஜக வேட்பாளர் சுரேந்திரன், 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் கிடைத்த முடிவுதான் இம்முறை வயநாட்டில் ராகுலுக்கு கிடைக்கும் என சூளுரைத்தார்.
இந்திய மக்கள் பாஜகவை தூக்கி எறியும் நாள் விரைவில் வரும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். காஞ்சியில் பேசிய அவர், “டெல்லி JNU பல்கலை.யில் இடதுசாரி மாணவர் அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. அதைப்போல தமிழ்நாட்டு மக்களும் பாஜகவை புறந்தள்ள வேண்டும். வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக இல்லாத இந்தியா அமையும், அதுவே நம்முடைய லட்சியம்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவில் தங்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில், பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், ₹6.54 கோடிக்கு அசையும் சொத்துகள், 200 பவுன் தங்க நகைகள், ₹15 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ₹21.54 கோடி மதிப்பு சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் தமிழ், தமிழ்… என முழங்கி வரும் சீமான், விருதுநகரில் நாதக சார்பில் கெளசிக் போட்டியிடுவார் என அறிவித்தார். ஓமன் நாட்டில் படித்துவிட்டு, நேரடியாக தமிழக அரசியலில் குதித்த, நாம் தமிழர் வேட்பாளருக்கு தமிழே படிக்கத் தெரியவில்லை. நேற்று வேட்புமனு தாக்கலின்போது, தமிழ் படிக்க தெரியாததால், தேர்தல் உறுதிமொழியை தேர்தல் அலுவலர் படிக்க, அதனை பின்பற்றி கெளசிக் படித்தார்.
தமிழ்நாட்டில் திமுக அதிமுகவுக்கு இடையேதான் போட்டி என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு பேசிய அவர், “எங்கள் எதிரில் அதிமுக என்ற இயக்கம் இருக்கிறது. அவர்களை தான் போட்டியாக கருதுகிறோம். அதிமுக என்ற பிரதான கட்சி என்ன சொல்கிறது என்பதற்கு மட்டுமே பதில் சொல்லுவோம். ப்பப்்்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவர், சம்பல்பூர் தொகுதியில் களம் காண்கிறார். கடைசியாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டில் பீகாரில் இருந்தும், 2018ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத்திய, மாநில அரசுகளின் மீது தமிழ்நாட்டு மக்கள் கடுங்கோபத்தில் உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அவர், “மக்களின் மனநிலை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக திமுக மற்றும் பாஜக அரசுகள் பணியாற்றவில்லை” என்றார்.
சைவத் திருத்தலங்களில் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது. ஞானசம்பந்தர் வழிபட்ட சிறப்புடைய இந்தத் தலத்தில் ஈசன் பதவி யோகம் அருள்பவராக அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சூட்சுமநாதர் – மங்களாம்பிகைக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, வெண்பொங்கல் படைத்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8 வரை 4,107 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உள்பட 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்.12-22ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். மே 10ஆம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.
Sorry, no posts matched your criteria.