India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்பரம் சின்னம் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பொதுச்சின்னம் பட்டியலில் இல்லை. எனவே இதுகுறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் எழுந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் நேற்று ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று அதே பெயர் கொண்ட மேலும் 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒரே பெயர் கொண்ட 5 சுயேச்சை வேட்பாளர்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, ஒரு நல்ல தகவல் இணையத்தில் பரவி வருகிறது. மக்களவைத் தேர்தல் பணிகள் நடந்து வருவதால் எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாகாமல் இருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, ரமலான் பண்டிகை அன்று படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்கப் போவதில்லை என்பதால் திமுகவிற்கு தூக்கம் போய்விட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டதாகவும், தற்போது சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ₹100 குறைத்துள்ளது தேர்தல் நாடகம் என்றும் விமர்சித்தார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலையை மேலும் ₹500 உயர்த்தி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோர காவல்படை நடத்திய நீர் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. அரசு முறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். மணிலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘பிலிப்பைன்ஸ் தனது இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கு இந்தியாவின் முழு ஆதரவு உறுதியாக இருக்கும்’ என்றார்.
ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல், நாளை காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடலில், ராம் சரண் டான்ஸ் இடம்பெற்றிருக்கும் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். ஷங்கர் இயக்கும் இப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ‘பார்டர் கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ▶முதல் டெஸ்ட் போட்டி, நவ.22-26, ▶2ஆவது டெஸ்ட் போட்டி, டிச.6-10, ▶3ஆவது டெஸ்ட் போட்டி, டிச.14-18, ▶4ஆவது டெஸ்ட் போட்டி, டிச.26-30, ▶5ஆவது டெஸ்ட் போட்டி, 2025 ஜன.3-7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இத்தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் ஜூன் 4ஆம் தேதி தொடங்க உள்ளது.
மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ள ‘லவ்வர்’ திரைப்படம், நாளை (மார்ச் 27) ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் கடந்த பிப்.9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. தற்கால தலைமுறையின் காதல் பிரச்னைகளை குறித்து பேசியிருக்கும் இப்படம், இளம் வயதினர்களை அதிகம் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கோடை விடுமுறையை குறிவைத்து முறைகேடாக முன்பதிவு செய்து விற்று வரும் நபர்களை ஆர்.பி.எஃப் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி சில கணினி மைய ஊழியர்கள், ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு (மார்ச் 31 வரை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், மதிய வேளைகளில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. கோடைகாலம் தொடங்கிவிட்டதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.