India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏப்ரல் 1 முதல் இ-ஸ்கூட்டர்களின் விலை 10% வரை உயரும் என்று கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியான ICRA தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம், எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்புத் திட்டம்-2024இன் காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. இத்திட்டத்தின் கீழ் பைக்குகளுக்கு ரூ.5,000 – ரூ.10,000 வரை மானியம் வழங்கப்பட்டுவருகிறது. தற்போது இந்த காலக்கெடு முடிவடைவதால் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தும் எனத் தெரிகிறது.
தஞ்சையில் 6 முறை எம்.பியாக இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு பதிலாக முரசொலி, கள்ளக்குறிச்சியில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு பதிலாக மலையரசன், தருமபுரியில் செந்தில்குமாருக்கு பதில் மணி, சேலத்தில் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு பதில் செல்வ கணபதி, பொள்ளாச்சியில் சண்முக சுந்தரத்திற்கு பதிலாக ஈஸ்வர சாமி, தென்காசியில் தனுஷ் எம்.குமாருக்கு பதிலாக ராணிஸ்ரீகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
CSK அணியின் கேப்டன் தோனி குறித்து ரவீந்திர ஜடேஜா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், “2023 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி இரு பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தேன். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தோனி, என்னை கட்டி தழுவினார். அந்த தழுவலை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். லவ் யூ தல” எனக் கூறியுள்ளார்.
சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. 2005இல் முஸ்லிம்களின் நிலை குறித்து ஆராய நீதியரசர் ராஜீந்தர் சச்சார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கள ஆய்வு செய்த இந்தக் குழு 403 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. வெளி நாடுகளில் இருப்பது போன்ற ‘சம வாய்ப்பு ஆணையம்’ உருவாக்க வேண்டும் என்பன போன்ற 70 விஷயங்களைக் குழு பரிந்துரைத்திருந்தது
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயபிரபாகரன் விருப்ப மனு அளித்துள்ளார். திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக சார்பில் அங்கு ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் விஐபி-க்ககள் மோதும் தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.
மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தலையொட்டி, தமிழக காவல்துறை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 28ஏ-வின்கீழ், டிஜிபி, காவல் ஆணையர்கள் உள்பட அனைத்து காவல்துறையினரும் தேர்தல் முடிவு வெளியாகும் வரை தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தி நடிகை ஜூஹி சாவ்லா, தனது திருமணத்தை 6 ஆண்டுகளுக்கு வெளியே தெரியாமல் மறைத்துள்ளார். 1980கள் முதல் 2000 வரை உச்சத்தில் இருந்த அவர், 1995ல் ரூ.4,130 கோடிக்கு அதிபதியான ஜெய் மேத்தாவை திருமணம் செய்தார். இது திரையுலகுக்கு தெரிந்தால், நடிப்பு தொழில் பாதிக்குமென கருதி, முதல் கர்ப்பம் தரித்தபிறகு, 2001ல் ஒரு பேட்டியிலேயே தெரியப்படுத்தினார். அந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் பாஜகவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. கோவை பாஜக நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களை அனுப்பிய ஸ்ரீ சாய்பாபா பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
I.N.D.I.A. கூட்டணிக்கு பொது தேர்தல் அறிக்கை கிடையாதா என மக்களிடையே கேள்வியெழுந்துள்ளது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள், I.N.D.I.A. கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், காங்கிரஸ் விரைவில் வெளியிடவுள்ளது. இதேபோல் பிற கட்சிகளும் வெளியிடலாம் என கூறப்படுவதால், பொதுவான தேர்தல் அறிக்கை கிடையாதா என்ற கேள்வியெழுந்துள்ளது.
இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையில், “16 மணிநேரம் வரை உண்ணாவிரதம் இருந்து விட்டு 8 மணிநேரத்துக்கு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இம்முறையை பின்பற்றுவோருக்கு 91% இதயநோய்கள் உண்டாகும். அத்துடன் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.