India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் ரூ. 3.28 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாக பிரமாணப் பாத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வைப்புத் தொகை என ரூ. 1.93 கோடிக்கு அசையும் சொத்துக்கள், ரூ. 2.35 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழிசையின் சொத்து மதிப்பு ரூ. 21.54 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
CUET UG தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 5 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு அவசியமாகும். CUET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இங்கே <
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4,107 மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற தமிழ் மற்றும் இதர மொழி தேர்வை 17,633 பேர் எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில், மஜக 5 தொகுதிகள் கேட்ட நிலையில் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாண்டியா தொகுதியில், குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தானே போட்டியிடுவதாக குமாரசாமி அறிவித்துள்ளார். மற்ற 2 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் RCB போட்டியின் டிக்கெட் விலையை பார்த்து, ரசிகர்கள் திகைத்து போயுள்ளனர். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைய குறைய கட்டணம் உயரும் நடைமுறை பின்பற்றப்படுவதால், P2 ஸ்டாண்டின் ஒரு டிக்கெட் ரூ.55,055-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.5,200 ஆகும். இது ஐபிஎல் தொடரில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த டிக்கெட்டுகளில் ஒன்றாகும்.
கோவையில் அண்ணாமலை 60% வாக்குகள் பெற்றால் அரசியலில் இருந்தே விலகிக் கொள்கிறேன் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியுள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. ஆனால், கோவையில் பாஜகவுக்கும் செல்வாக்கு அதிகம் இருப்பதால் அதிமுக, பாஜக இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பாஜக தங்களுக்கு போட்டியே இல்லை என்று ராமச்சந்திரன் பேசியிருக்கிறார்.
புனித வெள்ளி (மார்ச் 29), சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மார்ச் 28 இல் 505, மார்ச் 29 இல்300, மார்ச் 30 இல் 345 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு மார்ச் 28,29,30 ஆகிய தேதிகளில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விளவங்கோடு இடைத் தேர்தலில் 4 பிரதான கட்சிகளும் பெண்களையே வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளனர். இத்தொகுதியின் எம்.எல்.ஏ விஜயதாரணி, பாஜகவில் இணைந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் சார்பில் ஜெமினி ஆகிய 4 பெண்கள் இடைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
நஸ்லன், மமிதா பைஜு நடித்துள்ள ‘பிரேமலு’ திரைப்படம், வரும் மார்ச் 29ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவான இந்தப் படம், உலகளவில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகர் ஷபீர் மற்றும் மிர்னா மேனன் நடித்துள்ள ‘பர்த் மார்க்’ படமும் அதே தேதியில் ஆஹா (Aha) OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரேகா பத்ராவை பாசிர்ஹாட் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. மே.வங்கத்தில் சந்தேஷ்காலியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திரிணாமுல் காங்., பிரமுகர் ஷேக் ஷாஜஹான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரேகா பத்ராவை, இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி பிரசாரம் குறித்து கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.