news

News March 22, 2024

இந்தப் பழக்கம் மிகவும் ஆபத்தானது

image

இரவில் தூங்கச் செல்லும் முன் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். புகைப்பிடித்தல் புற்றுநோயை வரவழைக்கும் எனக் கூறினாலும், அதற்கு அடிமையானவர்கள் கைவிட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புகைப்பிடித்த உடனே தூங்கச் செல்வது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன் அதனை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

News March 22, 2024

சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு

image

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களில் 173/6 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பத்தில் ஆர்சிபி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் தினேஷ் கார்த்திக் -அனுஜ் ராவத் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அனுஜ் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் விளாசினர். சிஎஸ்கே சார்பில் முஸ்தாஃபிர் ரஹ்மான் 4, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News March 22, 2024

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு

image

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஓபிஎஸ் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மார்ச் 25இல் விசாரணைக்கு வருகிறது.

News March 22, 2024

தடுமாறும் பெங்களூரு அணி

image

17ஆவது ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், டு
பிளெஸிஸ் 35, கோலி 21, கிரீன் 28, மேக்ஸ்வெல் மற்றும் படிதர் டக் அவுட்டாகினர். சென்னை அணி தரப்பில் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் 4, தீபக் சாகர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

News March 22, 2024

அசத்தும் சென்னை.. அடுத்தடுத்து விக்கெட்

image

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது 12 ஒவரில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கோலி 21, டு பிளெசிஸ் 38, கேமரூன் க்ரீன் 18, மேக்ஸ்வெல் (0), படிதார் (0) ரன்கள் எடுத்தனர். CSK அணியில் முஸ்தாஃபிர் ரஹ்மான் 4, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இன்று ஆர்சிபி எவ்வளவு ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

News March 22, 2024

அசத்தும் தோனி.. அடுத்தடுத்து 2 கேட்ச்

image

ஆர்சிபி அணி 6 ஓவர்களில் 42/3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த படிதார் (0), மேக்ஸ்வெல் (0) ரன்கள் ஏதும் எடுக்காமல் இருவரும் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். முஸ்தாஃபிர் ரஹ்மான் 2, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தோனி 2 கேட்ச் பிடித்ததும் மைதானத்தில் விசில் பறந்தது.

News March 22, 2024

சற்றுமுன்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் காவல்

image

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் ED காவல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

News March 22, 2024

தனிநபர் கடனுக்கு செயலாக்கக் கட்டணம் இல்லை

image

₹20 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தை (Processing Fee) எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. “பண்டிகை தமாக்கா” என்ற பெயரில் மார்ச் 31 வரை இந்த சலுகை அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ள எஸ்பிஐ, குறைந்தபட்ச மாத வருமானம் ₹15,000 இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 22, 2024

250ஆவது போட்டிக்கு ருதுராஜ் கேப்டன்

image

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 250ஆவது போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுகிறார். இதற்கு முன் சிஎஸ்கே அணி விளையாடிய 50, 100, 150, 200ஆவது போட்டிகளுக்கு தோனி தலைமை தாங்கினார். சென்னையில் நடைபெறும் இன்றைய போட்டியில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

News March 22, 2024

ராஜ் பவனில் இருந்து தேர்தல் பரப்புரை ஆரம்பம்

image

மக்களவைத் தேர்தல் பரப்புரையை ராஜ் பவனில் இருந்து ஆரம்பித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், ” பொன்முடி பதவியேற்பு விழாவில், ஆளுநரிடம் இன்று தேர்தல் பரப்புரைக்கு செல்வதாக கூறினேன். அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆகையால், ஆளுநர் மாளிகையில் இருந்தே பரப்புரையை ஆரம்பித்துவிட்டேன். ராஜ் பவனில் தொடங்கியதை தொண்டர்கள் வெற்றி பயணமாக மாற்ற வேண்டும்” என்றார்.

error: Content is protected !!