India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க EDக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியும், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீத்திமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்துள்ள நீதிமன்றம், புதன்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் நேற்று களமிறங்கிய சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி, இனி வரும் போட்டிகளில் சில போட்டிகளில் விளையாடாமல் போக வாய்ப்புள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாட மாட்டார். இடையே சிறிய ஓய்வு எடுக்கலாம். அதனால் தான் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தோனி சிறப்பாக விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை, தஞ்சை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். மோடி தனக்கு கிடைத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். அவரின் ஆட்சி தொடர்ந்தால் இந்தியா இருக்காது. அதை தடுத்து நிறுத்த, மோடியை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.
உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என தஞ்சை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி திறனை மெருகேற்றும் வகையில் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ‘ThugLife’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதுகுறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
அதிமுக தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பம்மாத்து அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாகை, தஞ்சை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், ” மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க விழாவில் பங்கேற்ற இபிஎஸ், அதன் பிறகு அதைப் பற்றி பேசினாரா? பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை இதுவரை பேசியுள்ளாரா? தன் நலனுக்காக இபிஎஸ் தமிழக மக்களின் நலனை காவு கொடுத்துள்ளார்” என்றார்.
நாடு முழுவதும் இன்று புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இரவு 8.30 முதல் 9.30 மணி வரை, அவசியமின்றி எரியும் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என பொது மக்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பை குறைக்கும் இந்த முயற்சியில், மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 5 சுங்கச் சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வுக்கு வித்திடும் இந்தக் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என உறுதியளித்தார்.
தேர்தல் வந்தால் மட்டுமே மோடி தமிழகத்துக்கு வருவதாக அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து திருச்சுழியில் பேசிய அவர், “பிரதமர் புயல் மழை அடித்தால் தமிழகத்துக்கு வர மாட்டார். அப்போதெல்லாம் அவருக்கு தமிழக மக்களின் நினைவு வராது. ஆனால் தேர்தல் தேதி அறிவித்தால் இங்கேயே குடியிருப்பார். பிரதமரின் இந்த ஏமாற்று வேலைக்கு மக்கள் நல்ல தண்டனையை தருவார்கள்” என்றார்.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 175 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், சாம் கரண் சிறப்பாக ஆடி 63 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் வெற்றிபெற 6 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், 2 எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்தது. பின் லிவிங்ஸ்டன் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
Sorry, no posts matched your criteria.