India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இயக்குநர் ராமின் இயக்கத்தில் சாக்லேட் பாய் நிவின் பாலி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோட்டர்டாம் போன்ற பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், நிவினுக்கு கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
▶மார்ச் – 24 | பங்குனி – 11
▶கிழமை: ஞாயிறு | திதி: பௌர்ணமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:00 – 04:00 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 01:30 – 02:30 வரை
▶ராகு காலம்: மாலை 04:30 – 06:00 வரை
▶எமகண்டம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶குளிகை: மதியம் 03:00 – 04:30 வரை
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
மத்திய அரசின் பாரத் அரிசி & கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, 3 மாதங்களுக்கு சோதனை முறையில் விற்பனை செய்ய அனுமதி ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தகப்பிரிவு தலைமை இயக்குநர் நீரஜ் சர்மா அனுமதி அளித்துள்ளார். கிலோ அரிசி ₹29-க்கும், கிலோ கோதுமை ₹27.50-க்கும் விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
KKR அணியின் ஹர்ஷித் ராணாவின் செயலுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். SRH அணியின் சீனியர் வீரரான மயங்க் அகர்வாலை வெறுப்பேற்றும் வகையில், ராணா பறக்கும் முத்தமிட்டார். இதனைக் கண்ட கவாஸ்கர், “இதெல்லாம் தேவையில்லாத வேலை மிஸ்டர் ராணா. பேட்மேன்கள் பவுண்டரி அடிக்கும்போது, உங்களுக்கு முத்தமிட்டால் நன்றாக இருக்குமா? நீங்கள் தாங்குவீர்களா” என்று கூறினார்.
மத்தியபிரதேசம் போபால் அருகே காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியில் துடித்த அவருக்கு ஓடும் ரயிலுக்குள்ளேயே அங்கிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சம்பவமறிந்த ரயில்வே போலீசார் தாய்-சேய் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த குழந்தைக்கு ‘காமயானி’ என பெயர் சூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த இஞ்சி மல்லி கசாயம் பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி கொத்தமல்லியை சுத்தப்படுத்தி, பூண்டு, மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு கலந்து, இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் 3 நாள்கள் குடித்தால் போதும், கல்லீரலில் உள்ள தொற்று & நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் மறைமுக ஆதரவை பெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும், தன் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விஜய் உணர்த்துவது வழக்கம். இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் விஜயின் ஆதரவு இருந்தால், கணிசமான வாக்குகளைப் பெறலாம் என அரசியல் கட்சிகள் கருதுகின்றனர்.
2026இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தன் மூத்த மகனுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக சீமான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், அவர் இதனை உறுதிசெய்துள்ளார். திமுக வாரிசு அரசியல் செய்கிறது என விமர்சித்து வந்த சீமான், தற்போது நாதக-வில் அவரது மனைவிக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து சிலர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் ராம்குமார் ராமநாதன் முன்னேறியுள்ளார். சண்டிகரில் ஆடவருக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ராம்குமார், வியட்நாமின் ஹோங் லியுடன் மோதினார். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ராம்குமார் ஆட்டத்தின் முடிவில் ஹோங்கை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
*1401 – தமாஸ்கஸை மங்கோலியப் பேரரசர் தைமூர் தீக்கிரையாக்கினார். *1603 – முதலாம் எலிசபெத் மகாராணி மறைந்த நாள். *1837 – கனடாவில் கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1947 – மவுண்ட்பேட்டன் இந்தியாவின் ஆளுநரானார். *1988 – பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள். *1993 – சூமேக்கர் – லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது. *2020 – கொரோனா வைரஸ்: இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.