India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘ரமணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரயில் நிலையத்தில், தற்போது ‘SK23’ படப்பிடிப்பை நடத்தி வருவதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது ‘ரமணா’ படத்தில் இடம்பெற்ற இடத்திற்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வந்திருக்கிறேன். எல்லாம் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் திரும்பியிருப்பது மிக யதார்த்தமாக உள்ளது. #MissYouCaptain” என நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
“தங்கத்தின் விலையை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா?” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது இணையத்தில் கேலிக்குள்ளாகியிருக்கிறது. தங்கத்தின் விலையை உலக சந்தை தான் நிர்ணயிக்கிறது. அதனை குறைக்கவோ கூட்டவோ மத்திய அரசுக்கு கூட அதிகாரம் கிடையாது. இந்நிலையில், திமுக எப்படி தங்கத்தின் விலையை குறைக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளைய தினம் நிகழவுள்ளது. இந்த பகுதி சந்திர கிரகணம், காலை 10.23 மணி முதல் பிற்பகல் 3.02 மணி வரை நடைபெறவுள்ளது. பகல் வேளை என்பதால், இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது. இருப்பினும், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கிரகண நேரத்தில் ஸ்தோத்திரங்கள் சொல்லி கடவுளை வழிபடலாம். கிரகணம் முடிந்த பின் வெள்ளைப் பொருட்களை தானம் செய்யலாம்.
குளுகுளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். இன்றைய செய்தியாளர் சந்திப்பில், “கோவை ஒரு காலத்தில் குளுகுளு என்று இருந்தது. தற்போது 2 முதல் 3 டிகிரிகள் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லவே முடியாத அளவுக்கு சூடாகி இருக்கிறது. இதை மாற்ற மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்” என்று பேசினார்.
காயத்தில் இருந்து மீண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதீஷா பதிரனா, தற்போது அணியில் இணைந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது முழுவதும் குணமடைந்துள்ளதால், சேப்பாக்கத்தில் CSK அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாமகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “இரண்டு நாள்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் கூட்டணியை காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர். ஆனால், நாங்க அப்படி இல்லை. துளசி வாசம் மாறலாம். ஆனால் தவசி வார்த்தை மாறாது” என விஜயகாந்த் வசனத்தை பேசி பாமகவை விளாசியுள்ளார்.
பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ளார். டெல்லி பாஜக தலைமை அறிவித்திருக்கும் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கங்கனாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா போட்டியிட இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவுக்கு ஆதரவாக பேசிவரும் கங்கனாவுக்கு தலைமை இந்த முறை வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
111 பேர் அடங்கிய 5வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டாலுக்கு, அவர் எம்பியாக இருந்த குருஷேத்ரா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பல்பூர் – தர்மேந்திரா பிரதான், சுல்தான்பூர் – மேனகா காந்தி, தும்கா – சீதா சோரன், பெல்காம் – ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட பல தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மே 2024 CA தேர்வு எழுதுபவர்கள், தேர்வு எழுதும் மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என ICAI தெரிவித்துள்ளது. இடைநிலை, குரூப் 1, குருப் 2, சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள் வரும் மே மாதம் தொடங்குகிறது. தேர்வு எழுதுவோர் தேர்வு எழுதும் இடம், குரூப் மற்றும் மொழியை, வரும் மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை <
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே நிதானமாக விளையாடி வந்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, சாய் சுதர்ஷன் 45, ஷுப்மன் கில் 31 ரன்கள் குவித்தனர். மும்பை சார்பில், பும்ரா அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Sorry, no posts matched your criteria.