India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “சீட்டு விவகாரத்தில் கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார். 2 முறை என்னை சந்தித்து பேசினார். ஆனால் இதுபோல ஒரு முடிவை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.
எம்.பி.சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்தார் என்பது உண்மையல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கணேசமூர்த்தியின் மறைவு தலையில் பெரிய இடி விழுந்ததை போல் உள்ளதாக உருக்கமாக கூறிய அவர், சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் கூறியிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், 2 சீட் கொடுத்தால் தனது பெயரை பரிசீலனை செய்யுமாறு அவர் தெரிவித்திருந்ததாகவும் விளக்கமளித்தார்.
கடந்த ஒரு வருடத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,000 உயர்ந்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,510ஆகவும், சவரன் தங்கம் ரூ.44,080ஆகவும் விற்பனையானது. இந்த விலை படிப்படியாக அதிகரித்து கடந்த ஓராண்டில் கிராமுக்கு ரூ.740 உயர்ந்து இன்று ரூ.6.250ஆகவும், சவரன் தங்கம் ரூ.5,920 அதிகரித்து ரூ.50,000 ஆகவும் உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இதே போன்று புதிய அறிவிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்குமா? என அவை கேள்வி எழுப்பியுள்ளன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.50,000ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,215ஆகவும், சவரன் தங்கம் ரூ.49,720ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் கிராம் தங்கம் விலையில் இன்று ரூ.35 அதிகரித்து ரூ.6,250ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.280 உயர்ந்து , ரூ.50,000ஆக அதிகரித்திருப்பது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் ஏற்படும் பிரச்னைகளை சமரசம் செய்யும் முக்கிய தலைவராக மோடி உள்ளதாக புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுவை பாஜக வேட்பாளரும் தனது மருமகனுமான நமச்சிவாயத்தை ஆதரித்து பரப்புரை செய்த அவர், “பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். இத்தொகுதி வேட்பாளர் நமச்சிவாயம் மக்களவைக்கு செல்ல வேண்டும். அவர் வென்றால் புதுவைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும்” என்றார்.
அருணாச்சல் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பெமா காண்டு போட்டியின்றி தேர்வாகிறார். 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல் சட்டமன்றத்திற்கு ஏப்.19ம் வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்வர் உட்பட 4 பாஜக வேட்பாளர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் 5 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். 2019 சட்டமன்றத் தேர்தலில் 41, மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் பாஜக இங்கு வென்றது.
படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க படக்குழு முதலில் தன்னை அணுகியதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நீலாம்பரி கேரக்டரில் நடிக்க, என் அம்மா சம்மதிக்கவில்லை. ரஜினியோடு பல படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நெகட்டிவ் கேரக்டர் ஒத்து வராது என அவர் நினைத்தார்கள். அம்மாவின் விருப்பத்துக்கு ஏற்ப அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை” என்றார்.
அரசியலுக்கு வருவதில் விஜய் அவசரப்பட்டு விட்டாரோ என ரசிகர்களிடையே கருத்து நிலவுகிறது. 49 வயதான விஜய் நடிக்கும் கதாபாத்திரம், அவரை இளைஞராகவே பிரதிபலிக்கிறது. இது படத்துக்கு பயன்படுமே தவிர, அரசியலுக்கு உதவாது. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலினின் முதிர்ச்சியே அவர்களை வெற்றியடைய செய்தது. விஜய்யை இளைஞராகவே மக்கள் பார்ப்பதால், இன்னும் சில காலம் அவர் பொறுத்து இருந்திருக்கலாம் என்பதே கருத்தாக உள்ளது.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலத்திற்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.319ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஊதியம் ரூ.294 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.