India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் செயல்பட்டு வரும் IIM இல் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஏப்ரல் 12) கடைசி நாளாகும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக அனுபவம், வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
தேர்தல் பத்திர திட்டம் தொடர்பாக எந்த வருத்தமும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து பேசிய அவர், “தேர்தல் பத்திர திட்டத்தின் நன்மைகள் குறித்து காலமே தீர்மானிக்கும். நாங்கள் நீதிமன்றத்துக்கு எதிரானவர்கள் அல்ல. உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
வரும் மே 1 முதல் ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனையை நிறுத்தப் போவதாக சில்லறை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லாப பகிர்வு, கிளைம் செய்வதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் தொடர்வதால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 23 ரீடெய்ல் விற்பனை நிலையங்கள், 4,500 கடைகளில் ஒன் பிளஸ் விற்பனை நடைபெறாதென அறிவித்துள்ளனர்.
ஏப்ரல் 7ஆம் தேதி சனி பகவான் குருவின் நட்சத்திரமாகிய பூரட்டாதியில் நுழைந்தார். இந்த நகர்வு அனைத்து ராசியிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதீத பலனை அனுபவிக்கப் போகின்றனர். அதன்படி, மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று ராசிகளும் பணமழையில் நனைய இருப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். தொழிலில் லாபம், பணியிடங்களில் சம்பள உயர்வு, வியாபார பெருக்கம் ஆகியவை ஏற்படும்.
நாட்டில் பெண்களின் மேம்பாடு என்ற சொல்லை ‘பெண்கள் தலைமையிலான வளர்ச்சி’ என மாற்றியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பெண்களின் நிலை குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ராணுவம் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கழிப்பறைகள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற பிரச்னைகள் குறித்துப் பேசிய முதல் பிரதமர் நான்தான் என அவர் கூறினார்.
கேரளாவில் மோடியின் முகத்தை காட்டினால் போதும், நாங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடுவோமென கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். ஆலப்புழாவில் பேட்டியளித்த அவர், “கேரளாவிற்கு மோடியும், அமித்ஷாவும் எத்தனை முறை வர முடியுமோ வரட்டும். ஒவ்வொரு முறை அவர்கள் வரும் போதும் எங்களுக்கு ஆதரவு கூடிக்கொண்டே செல்கிறது. அவர்களின் கொள்கைகளை மக்கள் நன்கறிவர். பாஜக ஒரு சீட் கூட பெறாது” என்றார்.
RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் மும்பை வீரர் இஷான் கிஷன் 23 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இவரது அதிரடியால் மும்பை அணி 7 ஓவர்கள் முடிவில் 84 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 26*, இஷான் கிஷன் 56* ரன்களுடன் அதிரடியாக ஆடி வருகின்றனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் RCB பவுலர்கள் திணறி வருகின்றனர். இருவரும் சேர்ந்து சிக்ஸர் மழை (7சிக்ஸர்கள்) பொழிந்து வருகின்றனர்.
பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும், அவர்களால் தேர்தலில் வெல்ல முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், மதவாத அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றார். பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மும்பை – பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் ஒரு மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் டக் அவுட்டான RCB வீரர் மேக்ஸ்வெல், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்குடன் முதல் இடத்தில் இணைந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து ரஷித் கான், பியூஷ் சாவ்லா, நரைன், மந்தீப் சிங் 15 முறை டக் அவுட்டாகியுள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை ஆட்டம் காண வைக்கவே ஆட்டோவில் பரப்புரை மேற்கொள்வதாக பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவில் பரப்புரை செய்த அவர், “மக்களோடு இருப்பது தான் எனக்கு வசதி. ஆளுநராக இருந்த போது கிடைத்த வசதிகளை விட்டு வந்துள்ளேன்” என்றார். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை, தேர்தலில் போட்டியிட பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.