news

News March 28, 2024

‘கேளிக்கை விடுதி விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமல்ல’

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்ததற்கு, மெட்ரோ பணிகள் காரணமல்ல என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இன்றிரவு 7 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட அதிர்வு காரணமென தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள மெட்ரோ நிர்வாகம், விபத்து பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கமளித்துள்ளது.

News March 28, 2024

இந்த ராசியினருக்கு இனிமேல் கஷ்ட காலம்

image

சனி பகவானின் உக்கிரப் பார்வை பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் கடகம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் இனிவரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறருக்கு ஜாமின் தருவது, பத்திரங்களில் சாட்சிக் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், எதிர்பாராத இன்னல்கள் தேடி வரும் என்பதால் பரிகாரங்களை செய்து அதன்மூலம் ஆபத்திலிருந்து விடுபடலாம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 28, 2024

₹20 கோடியை விஜயதாரணியிடம் வசூலிங்க

image

விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு ₹20 கோடி ஆகுமென்றால், அதனை விஜயதாரணியிடம் வாங்கிவிடுங்கள் என சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பரப்புரைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘மக்கள் பணத்தில் தானே தேர்தல் நடத்துவீர்கள், என் பணத்தை ஏன் உங்களது பதவி ஆசைக்காக வீணடிக்கிறீர்கள். அப்படி இல்லையென்றால், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள்’ என்றார்.

News March 28, 2024

RR ரசிகர்களை ஏமாற்றும் பட்லர்

image

ஹிட்டர் பேட்ஸ்மேன் பட்லர் தொடர்ந்து சொதப்பி வருவது RR ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. LSG அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 11 ரன்கள் அடித்த பட்லர், DC-க்கு எதிரான இன்றைய போட்டியிலும் 11 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதுதவிர, கடந்த சீசனில் கடைசி 3 போட்டிகளிலும் அவர் டக்கவுட்டானார். இதனால், IPL-ல் கடந்த 5 போட்டிகளில் அவர் மொத்தம் அவர் 22 ரன்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

News March 28, 2024

வெற்றிகரமாக வானில் பறந்த தேஜாஸ் L.A.5033

image

உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸின் L.A.5033 ரக முதல் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. தேஜாஸ் M.K.1A என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் கூடிய இலகுரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த நிலையில், L.A.5033 ரக முதல் விமானம் வானில் சுமார் 18 நிமிடங்கள் வட்டமடித்தப் பின் தரையிறக்கப்பட்டது. இந்த சோதனை, போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

News March 28, 2024

249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

image

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.

News March 28, 2024

அதானியுடன் கைகோர்த்த அம்பானி!

image

இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கெளதம் அதானி, முகேஷ் அம்பானி தொழிலில் முதல்முறையாக கைகோர்த்துள்ளனர். அதானியின் துணை நிறுவனமான Mahan Energen Ltdக்கு சொந்தமான ரூ.10 முகமதிப்புள்ள 5 கோடி (26%) பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது. மேலும், ம.பி.,யில் உள்ள அதானி நிறுவனத்தின் 500 மெகாவாட் மின் உற்பத்தி மையத்தை பயன்படுத்த, இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளதாக செபியிடம் தெரிவித்துள்ளன.

News March 28, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் இரவு 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

மேற்கூரை சரிந்ததற்கு மெட்ரோ பணிகள் காரணம்?

image

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஷேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கூரை சரிந்ததற்கு, கேளிக்கை விடுதி அருகே மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளே காரணமென கூறப்படுகிறது. நிலத்திற்கு அடியில் ஏற்பட்ட அதிர்வை தாங்க முடியாமல் கட்டடம் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2024

தமிழகத்தில் 664 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

image

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 1,749 பேரில், 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய பரிசீலனையின் போது 664 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 56 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக நாகையில் 9 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதே போல விளவங்கோடு இடைத்தேர்தலில் 14 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

error: Content is protected !!