News April 12, 2024

இந்திராவை கொன்றவரின் மகன் தேர்தலில் போட்டி

image

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மகன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். 1984ம் ஆண்டில் இந்திராவை அவரது 2 பாதுகாவலர்கள் சுட்டுக் கொலை செய்தனர். அதில் ஒருவரான பேயந்த் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் கால்சா, ஃபரீத்கோட் தொகுதியில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அத்தொகுதி மக்களில் பலர் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி: தேஜஸ்வி

image

பிஹாரில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி நடப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் வெற்றியை அறிவிப்பதை தாமதப்படுத்தி, NDA கூட்டணி வெற்றியை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News November 14, 2025

Sports Roundup: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

image

*8 அணிகள் பங்கேற்கும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. *குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் 2.6 கோடிக்கு MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். *Bondi ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலகக் கோப்பை செஸ் 4-வது ரவுண்டில் பிரக்ஞானந்தா தோல்வி. *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார்.

error: Content is protected !!