India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘என் இனிய சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. நெல்லையில் தேர்தல் கூட்டத்தில் பேசிவரும் அவர், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜகவிற்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து INDIA கூட்டணிக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மாவை வாங்கத் தயாராக இருப்பதாக பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், எங்கள் அணிக்கு நிலைத்தன்மையும், சாம்பியன் மனநிலையும் கொண்ட கேப்டன் தேவை. ரோஹித்திடம் அவை அனைத்தும் உள்ளன. 2025 மெகா ஏலத்தில் அவர் வந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலவழித்து அவரை வாங்கத் தயாராக உள்ளோம் எனக் கூறியுள்ளார்.
சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு 10,000 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.20,00,000க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களின் வேலைவாய்ப்பு மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது. அதே நேரம், ரூ.12,00,000க்கும் குறைவான சம்பளம் வாங்குவோரின் வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக ஆயில் துறையின் வேலைவாய்ப்பு 22% வளர்ச்சி கண்டுள்ளது. ஐடி, பிபிஓ மற்றும் சில்லறை விற்பனை துறைகளின் வேலைவாய்ப்பு முறையே 16%, 6%, 5% சரிவை சந்தித்துள்ளன.
நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஏழ்மை மிகப்பெரிய பிரச்னையாக இருப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். சில சமயங்களில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதா? எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது என்றார். காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பயணித்த குலாம் நபி ஆசாத், ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற தனிக்கட்சி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பரப்புரைக்காக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. கேரளாவில் பிரசாரத்தை முடித்தபின் ஹெலிகாப்டரில் நெல்லை வந்த அவரை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். காரில் நின்றபடியே சாலையின் இருபுறமும் நின்ற மக்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்றார். இன்று நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி, விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தேர்வாகும் 100 பேருக்கு தலா ₹1 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 15) கடைசி நாளாகும். இதற்கு www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ் நடித்துள்ள புதிய படம் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’. தோனியின் பெயரை கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே 31இல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜான்வி கபூர், ராஜ்குமார் ராவ் இருவரும் 7ஆம் நம்பர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் இருக்கும் படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படத்திற்கும், தோனிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாஜக ஆட்சி தொடர்ந்தால் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பின் மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிரசாரம் செய்த அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையை விவரித்தார். பாஜகவின் ஆட்சி தொடர்ந்தால் விண்வெளித் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிசான் நிதி தொடர்ந்து வரும். முதியவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.