India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.29 கோடி பணம் சிக்கியது. தொடர்ந்து, அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
ரிஷப் பண்ட் உயரத்தை நடிகை ஊர்வசி ரதேலா மறைமுகமாக கிண்டல் அடித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “எனது காதல், டேட்டிங் வாழ்க்கையில், நடிகர்கள், தொழிலதிபர்கள், பேட்ஸ்மேன்களை பார்த்துள்ளேன். அதில் சிலர், என் உயரம் கூட வரமாட்டர்” என கூறியுள்ளார். இதை பார்த்த பண்டின் ரசிகர்கள், ஊர்வசிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, 2 பேரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில், மூளையாகச் செயல்பட்ட ஜாஃபர் சாதிக் கைதாகி சிறையில் உள்ளார். இவ்வழக்கில் இயக்குநர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், வரும் 2ம் தேதி ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை அமீர் இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்புவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து பெண் ஒருவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தை ஆதரித்து கோபாலபுரத்தில் நடிகை குஷ்பு வாக்கு சேகரித்தார். அப்போது பால்கனியில் நின்ற பெண் ஒருவர் குஷ்புவை பார்த்து கைகாட்டினார். பதிலுக்கு குஷ்புவும் கையசைத்தார். இதனால் உற்சாகமான அந்த பெண் அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லப்போவது யார் என்ற கருத்துக்கணிப்பை லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 – 37, அதிமுக கூட்டணி 1-3, பாஜக கூட்டணி 0-1, மற்றவை ( நாதக) 0-1 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தென்னிந்தியாவில் INDIA கூட்டணி 78 – 82, NDA கூட்டணி 28 – 34, YSRCP 10 – 11 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
காங்கிரசிடம் மேலும் ரூ.1,745 கோடி கேட்டு ஐ.டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே 1994-95 மற்றும் 2017-18 முதல் 2020-21 வரையிலான கால கட்டத்துக்கு வரி பாக்கி வைத்திருப்பதாக ரூ.1,800 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது 2014-15 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்துக்கு வரி பாக்கி வைத்திருப்பதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையும் சேர்த்து, ரூ.3,567 கோடி ஐ.டி கோரியுள்ளது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை செருப்புக்கு சமானவர் என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி எதுவுமே தெரியாத அண்ணாமலை அதைப்பற்றி பேசுவது நகைப்புக்குரியது. அவருக்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை எனக்கூறிய அவர், ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் தேர்வாகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் பாபரின் பெயரை முன்மொழிந்ததாகவும், அதனால், அவரை கேப்டனாக பிசிபி தலைவர் நியமித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்பு, அவர் ODI கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஏப்.17, 18 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் ஏப்.19 ( வெள்ளி) நடைபெற உள்ளது. இதனால் ஏப்.19ஆம் தேதி பொதுவிடுமுறை மற்றும் ஏப்.20,21 (சனி, ஞாயிறு) வார விடுமுறை வருகிறது. இதனால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு அதிகளவில் செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. காமெடி கலந்த குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.