News April 15, 2024

பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

image

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து, வெங்கடேஷ், சோனை முத்தையா, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், செல்வம் என்பவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 9, 2025

காரைக்காலில் நாளை பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

image

காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் 4 நாள்கள் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை சப்பர வீதி உலா, மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் காரைக்கால் பிராந்தியத்தில் நாளை மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நாளை அங்கு செயல்படாது என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

டெஸ்ட் தரவரிசை: மேல ஏறி வரும் சுப்மன் கில்!

image

ENG பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 886 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 2-வது இடத்தில் ENG-ன் ஜோ ரூட், 3-வது இடத்தில் NZ-ன் கேன் வில்லியம்சன் ஆகியோர் உள்ளனர். அதே நேரத்தில், இந்திய கேப்டன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை(807 புள்ளிகள்) பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் உள்ளனர்.

News July 9, 2025

IAS என்றால் கோர்ட்டை விட மேலானவரா? நீதிபதி கேள்வி

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை நிறுத்திவைக்க கோரி அவர் HC-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி, IAS அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என நினைத்துக் கொள்கிறாரா என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். கோர்ட்டின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா என்று வினவிய அவர், ஆணையரை நாளை ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!