India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு தேசிய அளவில் தனி பட்ஜெட் வெளியிடப்படும். 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். கவர்னர் பதவி ஒழிக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டு பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் எம்எல்ஏ ப.இளவழகன் மீண்டும் இபிஎஸ் முன்னிலையில் இணைந்துள்ளார். அதேபோல், நேற்று இரவு பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான KPD இளஞ்செழியனும் தனது தொண்டர்களுடன் அதிமுகவில் இணைந்தார். இருவருக்கும் அதிமுகவில் முக்கியப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சியளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிரதமர், முன்னாள் துணை பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? என்று விமர்சித்த அவர், இந்த அவமதிப்பு இவர் பெண்மணி என்பதாலா? (அ) இவர் பழங்குடி என்பதாலா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மீரட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், “மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். என்னை அச்சப்படுத்த நடக்கும் முயற்சி வெற்றி பெறாது. நாட்டை கொள்ளையடித்தோரிடம் இருந்து ஊழல் பணம் மீட்கப்படும். என்மீது எத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தாலும், ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையை நிறுத்த முடியாது” என்றார்.
நடப்பு 2024 ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றதும் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஒரு புள்ளி கூட எடுக்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணி வெல்லுமா? என கமெண்டில் சொல்லுங்க
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1960.30ஆக இருந்த நிலையில், ரூ.30.50 குறைந்து ரூ.1,930ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தர்மயுத்தம் நடத்தி கச்சத்தீவை மீட்டுத் தருவேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பரமக்குடியில் நடைபெற்ற பாஜக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், “கச்சத்தீவை முந்தைய காங்கிரஸ் அரசு தாரை வார்த்து விட்டது. அதனால் மீனவர்கள் உரிமை போய்விட்டது. அந்தத் தீவை மீட்க வேண்டுமென மோடி கூறியுள்ளார். நானும் கச்சத்தீவை தர்மயுத்தம் நடத்தி மீட்டுத் தருவேன்” என்றார்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பய்குரியில் வீசிய கடும் புயலில், 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்து, வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் பாதிப்பு அடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பவர் பிளேவில் சொதப்பியது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என CSK கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், “2வது இன்னிங்ஸில், பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது. ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். இருந்தாலும் இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். 2 வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம் தான். அதனால் கவலைப்பட தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.