news

News April 1, 2024

கச்சத்தீவு ஒப்படைப்பு குறித்து கருணாநிதிக்கு தெரியும் (1)

image

கச்சத்தீவு விவகாரம் குறித்து ஆர்டிஐ மூலம் அண்ணாமலை பெற்ற மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 1974ஆண்டில் ஜூன் 19இல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் வெளியுறவு செயலர் கேவால் சிங் சந்தித்து, கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு விட்டு கொடுக்கும் ஒப்பந்தம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது தனது ஒப்புதலை கருணாநிதி தெரிவித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

News April 1, 2024

சிஎஸ்கே தோல்வி: வைரலாகும் சாக்ஷியின் பதிவு

image

டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இதுகுறித்து தோனியின் மனைவி சாக்ஷி சிங் தனது இன்ஸ்டாவில் சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார். அதில், வெற்றிக் கணக்கைத் தொடங்கியதற்காக டெல்லி கேப்டன் பண்ட்டைப் பாராட்டினார். அத்துடன், தோனியின் இன்னிங்ஸை மறைமுகாக புகழ்ந்து பேசும் வகையில், போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்ததை உணரமுடியவில்லை என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

News April 1, 2024

ஏப்.9ல் சென்னை வருகிறார் மோடி

image

பிரதமர் மோடி ஏப்.9இல் சென்னை வர உள்ளதாகவும், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாகன அணிவகுப்பு மூலம் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், இந்த ஆண்டில் மட்டும் 6 முறை மோடி தமிழகம் வந்துள்ளார். தொடர்ந்து, நீலகிரி, பெரம்பலூர் தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

News April 1, 2024

தோனியின் பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்

image

டெல்லி அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் தோனி பவுண்டரி விளாசியபோது, ரசிகர்களின் கூச்சலால் மைதானமே அதிர்ந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். இதில் ஒரு பவுண்டரியை அவர் விளாசியபோது, ரசிகர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட்டதால் மைதானமே அதிர்ந்தது. அப்போது மைதானத்தில் சத்த அளவு, 128 டெசிபலாக பதிவாகியுள்ளது.

News April 1, 2024

அருணாச்சல் விவகாரத்தில் சீனா மீண்டும் அத்துமீறல்

image

அருணாச்சல் பிரதேச மாநிலத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்த மாநிலத்தில் உள்ள 30 இடங்களுக்கு புதிதாக பெயரிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலில் 2017இல் 6 இடங்களுக்கும், 2021இல் 15 இடங்களுக்கும், 2023இல் 11 இடங்களுக்கும் சீனா பெயரிட்டது. இந்நிலையில் தற்போது 12 மலைகள், 4 நதிகள், ஒரு நிலப்பகுதி உள்ளிட்ட மேலும் 30 இடங்களுக்கு சீன சிவில் விவகார அமைச்சகம் பெயரிட்டுள்ளது.

News April 1, 2024

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (1)

image

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதை தெரிந்து கொள்ளலாம். 1) புதிய வரிவிதிப்பு கட்டமைப்புக்குள் வரி செலுத்துவோர் தாமாக சேர்வது. அதில் சேர விருப்பமில்லையேல் பழைய வரிவிதிப்பில் தொடர்வது 2) பழைய வரி விதிப்பு முறையில் உள்ள மொத்த வருமானத்தில் ரூ.50,000-ஐ கழிக்கும் முறை புதிய வரி விதிப்பிலும் சேர்ப்பு

News April 1, 2024

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (2)

image

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகளை காணலாம். 3) ரூ.5 கோடிக்கும் அதிகமான வருமானம் கொண்டோருக்கு விதிக்கப்படும் சர் சார்ஜ் வரியை 37%ல் இருந்து 25% ஆக குறைத்தல் 4) 2023 ஏப்ரல் 1க்கு பிறகு அளிக்கப்படும் காப்பீடு முதிர்வு தொகையை வரி கட்டமைப்புக்குள் கொண்டு வருதல் 5) அரசு சாரா ஊழியர்களின் விடுப்பு பண வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துதல்

News April 1, 2024

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (3)

image

இன்று முதல் கீழ்காணும் வருமான வரி அமலுக்கு வருகிறது. 1) ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 5%, 2) ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் உடையோருக்கு 10%, 3) ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 15%, 4) ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20%, 5) ரூ.15 லட்சம், அதற்கு மேல் வருமானம் உடையோருக்கு 30% வரி அமலாகிறது.

News April 1, 2024

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்?

image

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு இயக்குநர் சுந்தர் சி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷிட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் விலகி விட்டார். மற்ற 3 பாக அரண்மனை படங்களுடன் ஒப்பிடுகையில் அரண்மனை 4 படம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

News April 1, 2024

₹500, ₹1000.. பணத்தில் ஜொலிக்கும் தமிழகம்

image

தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரப்புரை கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ₹500 ரொக்கம், பெண்களுக்கு ₹500 ரொக்கம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுவும், விடுமுறை தினமான நேற்று இளைஞர்களை அதிகளவில் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள் பயன்படுத்தியுள்ளன. அவர்களுக்கு ₹1000 வரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!