India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி இலங்கைக்கு திரும்பிச் சென்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோரிடம் இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொழும்பு சென்ற அவர்களை அழைத்துச் சென்ற போலீசார், 32 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்றது எப்படி என விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கதை பிடிக்காததாலும், கால்ஷீட் பிரச்னையாலும் நடிகர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை நழுவ விடுவார்கள். அந்த வகையில் விஜய் நடிப்பதாக இருந்து சில காரணங்களால் வேறு நடிகர்களுக்கு கைமாறிய படங்களும் உண்டு. அதன்படி, உன்னை நினைத்து, காக்க காக்க, அனேகன், முதல்வன், தீனா, பொன்னியின் செல்வன், சண்டக்கோழி, ஆட்டோகிராஃப், சிங்கம், ரன், தூள், உள்ளத்தை அள்ளித்தா போன்ற வெற்றி திரைப்படங்களை விஜய் தவறவிட்டதாக கூறப்படுகிறது.
தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. தைவான் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் ரமேஷ் கூறுகையில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தாய்பெய், தாய்ச்சு, ஸின்ச்சு ஆகிய நகரங்களில் பெரிய பாதிப்பு இல்லை என்றார். இருப்பினும் நிலச்சரிவில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
திருச்சியில் செயல்பட்டு வரும் IIM இல் ஆசிரியர் அல்லாத பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக அனுபவம், வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
மோடி தலைமையிலான ஆட்சியில் கிராமங்கள் மாற்றம் கண்டுள்ளதாக நட்டா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆயிரம் நாள்களில் 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளதாக கூறினார். 3,50,000 கிராமங்களுக்கு சாலை வசதியும், 12 கோடி கழிவறைகளும் கட்டிக் கொடுத்துள்ளாதாக தெரிவித்தார். இலவசமாக ரேஷன் பொருட்களை கொடுத்து 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த வாரம் கைது செய்தது அமலாக்கத்துறை. அதனை எதிர்த்து கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி ஆதாரப்பூர்வமாக தோலுரிக்கப்பட்டதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜகவில் இணைந்தவர்களில் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதை குறிப்பிட்டு பேசிய முதல்வர், ‘ஊழல்வாதிகளை கட்சியில் இணைத்து உத்தமர்கள் ஆக்கிவிட்டு ஊழலை ஒழிப்போம் என்று கூறுவதா? என பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தியாவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 4,262 மில்லியன் யூனிட்களாக இருந்த மின் நுகர்வு, தற்போது 4,722 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் மின் நுகர்வு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோடையில் அதிகபட்சமாக 243 ஜிகா வாட் மின் நுகர்வு இருந்தது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது வரலாற்றுப் பிழை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு அன்றைய மத்திய அரசு கொடுத்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், கச்சத்தீவை பற்றி பேசினாலே திமுகவுக்கு கோபம் வருவதாக விமர்சித்தார். பாஜக கூட்டணி மீண்டும் வென்றால் கச்சத்தீவு விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் சிக்கி அவர்கள் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் இன்று காலை பதிவானது.
Sorry, no posts matched your criteria.