India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சி.வி.சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
▶இதில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. ▶இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு, எலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும். ▶மேலும், உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் தரும். ▶அஜீரணம், மலச்சிக்கலை தடுப்பதோடு, வயிறு மற்றும் குடல் பிரச்னைகள் வராமல் தடுக்கும். ▶ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
2024 ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக முதல் 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், 85(39) ரன்கள் குவித்த சுனில் நரைனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி (6 புள்ளிகளுடன்) முதலிடத்தில் உள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களை, இலங்கை அரசு விடுவித்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் 19 பேரும் நேற்று கொழும்புவில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 19 தமிழக மீனவர்கள் நேற்று சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
▶1818 – அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.
▶1939 – இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார்.
▶1968 – அமெரிக்காவின் கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்.
▶1968 – நாசாவின் ‘அப்பல்லோ 6 விண்கப்பல்’ விண்ணுக்கு ஏவப்பட்டது.
▶1973 – இரட்டை கோபுரங்கள் (Twin Tower) நியூயார்க்கில் திறக்கப்பட்டன.
▶1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
உலக அளவில் வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பயனர்கள் மெசேஜ்களை அனுப்ப முடியவில்லை, பெற முடியவில்லை மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்த வாட்ஸ் அப் நிறுவனம், “பிரச்னை சரி செய்யப்பட்டு, விரைவில் 100% சேவையை வழங்க பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி காட்டியுள்ளார். 273 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை தடுமாறி வந்தது. அப்போது பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் வீசிய 12ஆவது ஓவரில் 4 6 6 4 4 4 என விளாசி அசத்தினார். ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்த அவர், தோல்வி விளிம்பில் இருந்த அணிக்கு உயிர் கொடுத்தார்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 125
▶குறள்: எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
▶விளக்கம்: பணிவு என்னும் பண்பு, எல்லோருக்கும் நன்மை பயக்கும். அதனால், ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு மேலும் ஒரு செல்வமாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு, சி-விஜில் (cVIGIL) என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் 16ஆம் தேதியில் இருந்து, இந்த செயலி மூலம் பலர் புகார்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை 2,193 புகார்கள் இந்த செயலிக்கு வந்துள்ளன. அவற்றில் 1,694 புகார்களின் உண்மைத் தன்மை அறியப்பட்டு ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக கரூர்-372, சென்னை-209 புகார்கள் ஏற்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.