News April 18, 2024

சிஏஏ குறித்து ராகுல் ஏன் கருத்து சொல்லவில்லை?

image

குடியுரிமை திருத்த மசோதா குறித்து காங்., எம்.பி. ராகுல் காந்தி ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். பாலக்காட்டில் பிரசாரம் செய்த அவர், “பாரத் ஜோடோ யாத்திரையின் போது தேசிய அரசியல், சர்வதேச அரசியல் பற்றி ராகுல் பேசினார். ஆனால் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடைசிவரை வாய் திறக்கவில்லை” எனக் கூறினார்.

Similar News

News November 11, 2025

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு… சிறிது நேரத்தில்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 243 தொகுதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு இறுதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 6:30 முதல் பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. NDA கூட்டணி ஆட்சி தொடருமா, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரளவு இந்த கருத்துக் கணிப்பில் தெரிந்துவிடும். முடிவுகளை அறிய வே2நியூஸில் காத்திருங்கள்.

News November 11, 2025

பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

image

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

News November 11, 2025

ரஷித் கானுக்கு 2-வது திருமணம்?

image

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆக.20-ம் தேதி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். தான் எதிர்பார்த்தது போல அன்பு, அமைதியை உருவகப்படுத்தும் வகையில் தன் மனைவி திகழ்வதாக கூறியுள்ளார். ரஷித் கான் கடந்த ஆண்டு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!