news

News April 4, 2024

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 28% அதிகரிப்பு

image

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 28% அதிகரித்துள்ளது. வயநாடு தொகுதியில் 2ஆவது முறையாக போட்டியிடும் அவர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதிலுள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ₹20.4 கோடி சொத்துகள் இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் ₹5 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். கையில் ரொக்கமாக ₹55,000, 2 வங்கி கணக்குகளில் ₹ 26 லட்சம் இருப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

அன்புமணி ஒரு அரசியல் பச்சோந்தி

image

அன்புமணி ஒரு அரசியல் பச்சோந்தி என முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் விமர்சித்துள்ளார். இடத்திற்கு இடம் பச்சோந்தி நிறம் மாறுவதை போல் தேர்தலுக்கு தேர்தல் பாமக கூட்டணி மாறும் என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவை குறைகூற எந்த அருகதையும் இல்லாதவர் அன்புமணி என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் மட்டும் அல்ல, 2026 பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று தெரிவித்தார்.

News April 4, 2024

மோகன்லால் அவுட்; சிவராஜ் குமார் என்ட்ரி

image

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து மோகன்லால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத அந்த படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. தற்போது, கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக, சிவராஜ் குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 4, 2024

ரிஷப் பண்டுக்கு மீண்டும் அபராதம்

image

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச டெல்லி அணி அதிக நேரம் எடுத்து கொண்டதற்கு ₹ 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் இதே காரணத்துக்காக பண்டுக்கு ₹ 24 லட்சமும், மற்ற வீரர்களுக்கு ₹ 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2024

ED கைதுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

image

ED கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-இல் கெஜ்ரிவால் கைதானார். தனது கைதை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னதாக இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் 6 மாத சிறைத் தண்டனைக்கு பிறகு நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

News April 4, 2024

BREAKING : ரயில் மோதி 4 பேர் மரணம்

image

சென்னை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்ததை அடுத்து 4 பேரும், சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

News April 4, 2024

உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

கீழமை நீதிமன்ற தீர்ப்பில், காரணமின்றி உயர்நீதிமன்றங்கள் தலையிட்டு திருத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ம.பி.யை சேர்ந்த இருவர் வழக்கு ஒன்றில் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, பிறகு உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டம், உண்மைக்கு எதிராக கீழமை நீதிமன்ற தீர்ப்பு இல்லாத வரை, அதில் தலையிடக் கூடாது என உத்தரவிட்டது.

News April 4, 2024

4 முகத்துடன் காட்சி தரும் சின்னாளப்பட்டி முருகன்

image

தமிழ்நாட்டில் முருகனுக்கு 500க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. குறிப்பாக, அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்தில் அமர்ந்த நிலையிலும், மற்ற தலங்களில் நின்ற நிலையிலும் காட்சி தருகிறார். திருச்செந்தூரில் நான்கு உற்சவர்களுக்கும் தனி சன்னதி உண்டு. அதைப்போல சின்னாளப்பட்டி முருகன் நான்கு முகத்துடன் அருள் பாலிக்கிறார். பழனி கோயிலில் மட்டும் ஆனி கேட்டையில் அன்னாபிஷேகம் நடைபெறுவது கூடுதல் சிறப்பு.

News April 4, 2024

நாடு முழுவதும் வெப்ப அலை வீசும்

image

இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “40 – 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, குழந்தைகள், முதியோரின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது சுகாதார முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

News April 4, 2024

சிங்கப்பூரில் PhonePay சேவைகள்

image

PhonePay பயனர்கள் இனி, சிங்கப்பூரிலும் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு சுற்றுலா வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, PhonePay பயனர்கள் தங்கள் இந்திய வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக இரு நாடுகளுக்கும் இடையே வெளிநாட்டு பரிவர்த்தனைகளை நொடியில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிகிறது.

error: Content is protected !!