India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டிற்கான சிறந்த உலகப் பத்திரிகை புகைப்படக் கலைஞருக்கான விருதை, ராய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் முகமது சலேம் பெற்றுள்ளார். காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் பாலஸ்தீனப் பெண் ஒருவர் தனது இறந்துபோன, வெள்ளைத் துணி போற்றிய 5 வயது குழந்தையின் உடலை நெஞ்சோடு அணைத்தபடி பிடித்திருப்பார். இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ கிரகங்களில் மங்கள நாயகனான சுக்கிர பகவான் செல்வச் செழிப்பு, ஆடம்பரத்தை அள்ளித் தருவார். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்வதால் மிதுனம், தனுசு, விருச்சிகம், மீன ராசியினர் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர். மண்ணும் பொன்னாகும் யோகம், வியாபாரத்தில் லாபம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, பணவரவு, வழக்குகளில் சாதகமானத் தீர்ப்பு போன்ற பல்வேறு பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் துண்டிக்கப்பட்ட கையை இணைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அசோக் என்ற கூலித் தொழிலாளியின் வலது கையானது விபத்தில் சிக்கி துண்டானது. இந்நிலையில், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வெற்றிகரமாக கையை இணைத்துள்ளனர். எலும்புகள், நரம்புகள், இரத்தக் குழாய்கள் என அனைத்தையும் இணைக்க 10 மணி நேரம் சிகிச்சை நடந்தது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை அணிக்காக இதுவரை 224 சிக்ஸர்கள் அடித்து, அந்த அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பொல்லார்டின் (223) சாதனையை முறியடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா 104, இஷான் கிஷன் 103, சூர்யகுமார் 97 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி. இவரின் பெற்றோர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தவர்கள். தற்போது 38 வயதாகும் நளினி, இந்தியாவில் பிறந்ததை ஆதாரமாக கொண்டு வழக்குத் தொடுத்து பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் தயாராக இருக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், தற்போது வெயில் சுட்டெரிப்பதால் அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி அளிக்கும் வகையில் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடைபெறும் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக அதிக வெற்றியைப் பெரும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை தென் மாநிலங்களில் எங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். தென் மாநில மக்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்றார். கடந்தமுறை தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
ரோஹித் ஷர்மா – ஹர்திக் பாண்டியா இடையே மனக்கசப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வந்தாலும், இருவரும் நட்புடன் இருக்கின்றனர். இன்றைய போட்டியில் ரோஹித் சிக்ஸர் அடித்தபோது அதை (ஃபேன் பாயாக மாறி) ஹர்திக் கைதட்டி கொண்டாடினர். இதை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், பாண்டியா ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
டெல்லி முதல்வரும் துணை முதல்வரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், எம்.எல்.ஏ ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அமனத்துல்லா கான், டெல்லி வக்ஃபு வாரியத் தலைவராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கூடுதல் விவரங்கள் விரைவில்.
மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் 193 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி துரத்தி வருகிறது. இந்த நிலையில், MI பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் PK வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷாம் கரன் 6, பிராப்சிம்ரன் 0, ரோஸ்ஸோ 1, லிவிங்ஸ்டன் 1 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். MI தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா மற்றும் கோட்ஸி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில எந்த அணி வெல்லும்?
Sorry, no posts matched your criteria.