India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பானின் ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே சற்றுமுன் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை தொடர்பாகவும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நேற்று தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களின் ஆயுள்காலம் சராசரியாக 8 ஆண்டுகள் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. லான்செட் மருத்துவ இதழில் 1990-2021 வரை இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதில் உலகத்தில் 6.2 ஆண்டுகளும், இந்தியாவில் 8.3 ஆண்டுகளும் ஆயுள்காலம் அதிகரித்துள்ளதாகவும், சுவாச நோய்கள், பக்கவாதம், புற்றுநோயால் ஏற்படும் மரணம் குறைந்ததே காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி 5 நாட்கள் பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார். ஐநாவில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் இருந்தபோது, பிறரிடம் லிப்ட் கேட்டு கார்களில் பயணித்ததாக தெரிவித்தார். மேலும் பல்கேரியா-செர்பியா இடையேயான நிஷ் பகுதியில் பயணித்த போது 5 நாள்கள் பட்டினி இருந்ததாகவும் நாராயணமூர்த்தி கூறினார்.
மகாராஷ்டிராவில் முன்னாள் எம்.பி சஞ்சய் நிருபம் காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 ஆண்டு காலம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவித்துள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்ததை வெளிப்படையாக எதிர்த்து வந்த அவர், தனக்கு சீட் கொடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார். இதனால், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்ட அவர், தற்போது 6 ஆண்டுகாலம் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து பள்ளி வாகனங்களிலும் பெண் உதவியாளர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேகக் கட்டுப்பாடு கருவி மற்றும் சிசிடிவி பொருத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
ராகுல் காந்திக்கு எதிராக 18 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 2ஆவது முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதிலுள்ள பிரமாணப் பத்திரத்தில் தன்மீது 18 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார். இதில், பிரதமர் மோடி பெயர் குறித்து விமர்சித்த வழக்கும் ஒன்று என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
2026-இல் திமுக, அதிமுக இல்லாத ஆட்சி என்பது தான் பாமகவின் இலக்கு என அன்புமணி தெரிவித்துள்ளார். 57 ஆண்டுகளாக இக்கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டதாக கூறிய அவர், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி அதை சரிசெய்யும் என்றார். மேலும் பேசிய அவர், பாமக வாக்குகள்தான் தமிழ்நாட்டில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அதை இந்த தேர்தலில் மீண்டும் உறுதி செய்வோம் என்றும் அவர் கூறினார்.
விஜய் நடித்த ப்ளாக் பஸ்டர் படமான கில்லி ஏப்.20 தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே கில்லி படம் படைத்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக முதல் வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படம் என்ற எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்தின் ரெக்கார்டை முறியடித்தது. மேலும், ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்படம் என்ற சாதனையை படைத்தது. கில்லி-க்கு முன்பு வரை ரஜினியின் படையப்பா படமே வசூலில் முதலிடத்தில் இருந்தது.
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்குழுவில் பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பெரும் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்களில் பூத் சிலிப் வைத்து தான் பலரும் வாக்கு செலுத்தினர். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்; வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.