India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிஜூ ஜனதா தள எம்எல்ஏக்கள் அரவிந்த தாளி, பிரேமானந்த நாயக் ஆகியோர், பாஜகவில் அண்மையில் சேர்ந்தனர். இதையடுத்து 2 பேருக்கு எதிராகவும், சபாநாயகரிடம் பிஜூ ஜனதா தளம் புகார் அளித்தது. இதைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் 2 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்களில் இன்றும், நாளையும் திருத்தம் மேற்கொள்ளலாம். மே 5ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்து. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் போன்றவற்றை <
தாலிக்கு தங்கம் திட்டத்தை அதிமுக நிறுத்தியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பச்சை பொய் சொல்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், ஆளும் திமுக அரசு 100% தோல்வி அடைந்து, மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. மடிக்கணினி, அம்மா கிளினிக் உள்பட அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்திவிட்டது என்றார்.
திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததால், மகுடீஸ்வரன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று சினிமா பட பாணியில் அதிரடியாக கைது செய்து, தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகின்றனர்.
டாஸ்மாக் மதுப் பாட்டில்களைப் பாதுகாக்க குளிர்சாதன குடோன் அமைத்த அரசுக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ஏன் மனம் வரவில்லை என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாமக்கலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரப்புரை செய்த அவர், குடிப்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறையை மதுப் பாட்டில்களை சேமித்து வைக்கும் குடோன்களைப் பாதுகாக்க நிறுத்தும் கேவலம் இங்கு தான் நடக்கிறது என்றார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ள பட பெயரை இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள அவர், போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தாம் நடிப்பதாகவும், படத்தின் பெயர் சிக்கந்தர் என்றும், அந்த படம் 2025 ரமலான் பண்டிகையின்போது வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் 3வது தீய சக்தியாக ஒரு கூட்டணி அமைந்துள்ளது; மதவாத, மத வெறியை தூண்டும் கட்சியாக, மத அடிப்படையில் செயல்படும் கட்சியாக பாஜக உள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். அதிமுக உடன் ஒப்பிடும்போது திமுக கூட்டணியில் மனிதநேயம், செயல்திறன் அதிகமாக உள்ளது. வரும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மூலம் ஊழலுக்கு மக்கள் குட்பை சொல்ல வேண்டுமென பாஜக தலைவர் ஜேபி நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிமில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சிக்கிமுக்கு வளர்ச்சி, அமைதி, உள்கட்டமைப்பு வசதி, வளர்ச்சியை பாஜக அரசு கொடுக்கும் என்றும், ஆதலால் தேர்தலில் ஊழலுக்கு குட் பை சொல்லிவிட்டு, தாமரையை மலர விட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இபிஎஸ் ரோடு ஷோ சென்றால், அதில் எத்தனை பேர் வருவார்கள் என அண்ணாமலை கடுமையாக தாக்கினார். பழைய பஞ்சாங்கத்தையே இன்னும் இபிஎஸ் பேசி வருகிறார். அவர் வாகனப் பேரணி சென்றால் யாரும் வரமாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும். வேண்டுமென்றால் அதிமுகவினர் ரோடு ஷோ நடத்திக் காட்டட்டும் என்று சவால் விடுத்த அவர், பிரதமர் மோடி நடத்தியது ரோடு ஷோ அல்ல, மக்கள் தரிசன யாத்திரை என்று தெரிவித்தார்.
சமூக விரோதிகளை பாஜகவில் இருந்து நீக்கிவிட்டால், அக்கட்சியில் ஆட்களே இருக்க மாட்டார்கள் என்று தமிழக அமைச்சர் TRB ராஜா கூறியுள்ளார். கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், “பாசிச சிந்தனைக்கு எதிராக போராடும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்டு படித்த இளைஞர்கள் தன்னார்வத்துடன் எல்லா பகுதிகளிலும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்
Sorry, no posts matched your criteria.