India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் காரியப்பட்டி அருகே வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல முறை கோரிக்கை விடுத்தும் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் சிக்கியதாக கூறப்படுவதால் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒரே நேரத்தில் பழுதானது எப்படி என பு.த.க தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “யு.எஸ்.பி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், நேற்று சிசிடிவி கேமராக்கள் 5 மணிநேரம் இயங்கவில்லை. இது முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து சத்யசாகு ஆய்வு செய்து, உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு நடிகை மாளவிகா மோகனன் காட்டமாக பதிலளித்துள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் மாளவிகா உரையாடியபோது, ரசிகை ஒருவர் நீங்கள் எப்போது நடிப்பு பயிற்சிக்கு செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஏதாவது ஒரு துறையில் நல்ல பொறுப்பில் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு இந்த கேள்விக்கு பதிலளிப்பதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த கலந்துரையாடலை அவர் முடித்துக்கொண்டார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹920 சரிந்துள்ளது. நேற்று ₹54,000க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,080க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,750க்கு விற்ற ஒரு கிராம் தங்கம், இன்று ₹115 குறைந்து ₹6,635க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சுமார் ₹1000 குறைந்திருப்பது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ₹86.50க்கு விற்பனையாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் தனது இசையை அனுமதியின்றி பயன்படுத்தியது தொடர்பாக இளையராஜா தரப்பில் சன் பிக்சர்ஸுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காப்புரிமை சட்டம் 1957இன் கீழ் குற்றம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ‘கூலி’ டீசரில் இளையராஜாவின் ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் 25இல் மட்டுமே பெண்கள் CEOக்களாக இருக்கின்றனர். 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் ஒரு பெண் கூட இல்லை. பெண் தலைவர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் படைப்பாற்றல் (Creativity) அதிகரித்தாலும் மற்ற நிறுவனங்கள் பெண்களை ஏற்க மறுப்பது பிற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது. சமூக மாற்றத்திற்கு பெண்களை உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டியது அவசியமாகிறது.
அஜித் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த ‘தீனா’ படம் இன்று ரீரிலீஸாகிறது. இந்நிலையில், தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான இப்படம் ரீரிலிஸ் ஆவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘தல’ என்ற வார்த்தைக்கு இலக்கணமான அஜித் சாருக்கு நன்றி என்றும், இப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் கொண்டாடுவோம் எனவும் கூறியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தொழில்துறை பொருள்களின் விகிதம் 30% ஆக உயர்ந்துள்ளதாக குளோபல் டிரேடு ரிசர்ச் இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் போன்றவற்றில் சீன தயாரிப்புகளை இந்தியா நம்பியுள்ளது. 2018-19இல், ₹5.83 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி மதிப்பு 2023-24இல், ₹8.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
காங்கிரஸைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், “பிரதமர் மோடி, நாட்டின் 45% சொத்துக்களை 20, 25 தொழிலதிபர்களுக்கு கொடுத்து, அதற்கு பிரதிபலனாக ₹8,000 கோடியை தேர்தல் பத்திர நன்கொடையாக பெற்றவர். அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிக்கும் என்று கூறுவது விந்தையாக இருக்கிறது” என்றார்.
Sorry, no posts matched your criteria.