News May 1, 2024
கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News December 12, 2025
வங்கி கணக்கில் ₹1,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சற்றுமுன் CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்து வைத்துள்ளார். புதிதாக 17 லட்சம் பேரின் வங்கி கணக்கில் ₹1,000 உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக பயனாளிகளுக்கு CM ஸ்டாலின் கூறியதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மகளிரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் இந்த ₹1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை என குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 12, 2025
2025 டி20-ல் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்கள்

2025-ல் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில், இருவரை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ், மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தாண்டு எந்தெந்த பேட்ஸ்மேன்கள், எத்தனை போட்டிகளில், எவ்வளவு ரன்கள் குவித்துள்ளனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 12, 2025
இந்த ஜூஸ் குடித்தால் அவ்வளவு நன்மைகள்!

அவகாடோ பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளன. இதை ஜூஸாக அருந்துவது, பின்வரும் நன்மைகளை தரும் என நியூட்ரிஷனிஸ்ட் பரிந்துரைக்கின்றனர்: *இதயத்திற்கு நல்லது *எடை குறைப்புக்கு உதவும் *செரிமானத்தை சீராக்கும் *சருமம், முடி ஆரோக்கியத்துக்கு உதவும் *கண் ஆரோக்கியம் காக்கும் *எலும்பை வலிமையாக்கும் *மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.


