India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சனிப்பெயர்ச்சியைப் போல் குருப்பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெறுவதால், குருபகவானுக்கான சிறப்பு வாய்ந்த கோவில்கள் மட்டுமின்றி நவக்கிரகங்கள் உள்ள அனைத்துக் கோவில்களிலும் வழிபாடு செய்யலாம். குரு பகவானை மஞ்சள் துணி, சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து வழிபட்டால் நன்மை கிடைக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை இரண்டாவதாக வழிபட வேண்டும். முதலில் நவகிரகங்களில் உள்ள குருபகவானைத்தான் வழிபட வேண்டும்.
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 132 ரன்களைச் எடுத்தது. அந்த அணியின் ஹீலி மேத்யூஸ் 68 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் WI தொடரைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் கூட்டணி குழப்பங்களின் மொத்த உருவமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஊழல் கட்சிகள் சட்டையை மாற்றுவது போல் தங்கள் கொள்கைகளையும் கூட்டணிகளையும் மாற்றிக்கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், அதன் ஒரு வெளிப்பாடாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்றைக்கு INDIA கூட்டணியாக மாறி இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எப்போதும் தெளிவான முடிவை எடுக்காது என்றார்.
நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் ஏற்படும் தொடர் மரணங்கள் குறித்து நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அடுத்தடுத்து மாணவ மரணங்கள் ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் மட்டும் அங்கு 25க்கும் அதிகமான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நீட் மரணங்களுக்கு அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ₹24 லட்சம் அபராதம் விதித்துள்ளது. LSG அணிக்கு எதிரான 48ஆவது லீக் போட்டியில், MI அணி ஸ்லோ ஓவர் ரேட் செய்தததை அடுத்து, அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. MI அணி இன்னும் ஒரு ஸ்லோ ஓவர் ரேட்டைப் பெற்றால் ஒரு போட்டியில் விளையாட கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் காரியப்பட்டி அருகே வெடி விபத்து ஏற்பட்ட கல்குவாரியை மூடக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல முறை கோரிக்கை விடுத்தும் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் சிக்கியதாக கூறப்படுவதால் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒரே நேரத்தில் பழுதானது எப்படி என பு.த.க தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “யு.எஸ்.பி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், நேற்று சிசிடிவி கேமராக்கள் 5 மணிநேரம் இயங்கவில்லை. இது முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து சத்யசாகு ஆய்வு செய்து, உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு நடிகை மாளவிகா மோகனன் காட்டமாக பதிலளித்துள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் மாளவிகா உரையாடியபோது, ரசிகை ஒருவர் நீங்கள் எப்போது நடிப்பு பயிற்சிக்கு செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். ஏதாவது ஒரு துறையில் நல்ல பொறுப்பில் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு இந்த கேள்விக்கு பதிலளிப்பதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த கலந்துரையாடலை அவர் முடித்துக்கொண்டார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹920 சரிந்துள்ளது. நேற்று ₹54,000க்கு விற்ற ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,080க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,750க்கு விற்ற ஒரு கிராம் தங்கம், இன்று ₹115 குறைந்து ₹6,635க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சுமார் ₹1000 குறைந்திருப்பது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ₹86.50க்கு விற்பனையாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் தனது இசையை அனுமதியின்றி பயன்படுத்தியது தொடர்பாக இளையராஜா தரப்பில் சன் பிக்சர்ஸுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காப்புரிமை சட்டம் 1957இன் கீழ் குற்றம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ‘கூலி’ டீசரில் இளையராஜாவின் ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.